“பிக்கப் பண்றத முதல்ல நிறுத்து” – ஆர்யாவிற்கு நயன்தாரா அட்வைஸ்..!

சினிமாவுல ரொம்ப நாளா கல்யாணம் பண்ணாம இருக்குற ஹீரோக்களை பத்தி கிசுகிசு வர்றது சகஜமான ஒன்னுதான். ஆர்யாவுக்கு வீட்டில் தீவிரமாக பெண் தேடிக்கொண்டுதுதான் இருக்கிறார்கள். அழகுக்கு இருக்கிறது.. புகழ், பணம் இருக்கிறது. ஆனால் பெண் அமைந்தால் தானே.. ஆன்ட்ராய்டு செல்போன் கூட ப்ரீயா கிடைக்கும்.. ஆனால் ஆர்யாவுக்கு பெண் கிடைப்பதுதான் கஷ்டமாக இருக்கிறதாம். காரணம் எங்கு போனாலும் நடிகரின் பிக் அப் டிராப் பற்றித்தான் கேட்கிறார்களாம்.

சினிமா உலகில் தனது கண்ணில் யாரேனும் ஒரு புதுமுக நடிகை தென்பட்டு விட்டால் போதும், அவர்களிடம் நலம் விசாரித்து அவரது போன்நம்பரை கைப்பற்றி விடுவார் ஆர்யா. அதையடுத்து மேற்படி நடிகையுடன் போனில் பேசத்தொடங்கி விடுவார். இவர் பேச்சில் மயங்கிப்போகும் மேற்படி நடிகைகள் பின்னர் இவரை சுற்றிவர ஆரம்பிப்பார்கள்.

இதற்கு முன்னணி நடிகைகளும் விதிவிலக்கல்ல. தவிர ஆர்யா கொடுக்கும் பிரியாணி விருந்து பற்றி சொல்லவே வேணாம். இதையும் கூட, பெண் கேட்டுப்போன இடங்களில் புட்டுப்புட்டு வைத்து பெண் தர மறுத்து விடுகிறார்களாம். இதை கேள்விப்பட்ட ஆர்யாவின் நெருங்கிய தோழியான நயன்தாரா, கொஞ்ச நாளைக்கு பிக்கப், ட்ராப்பையும் பிரியாணி விருந்தையும் நிறுத்து என அன்புக்கட்டளை போட்டுள்ளாராம்.