இயக்குநர் கவுதம் மேனன் – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இணையும் புதிய திரைப்படம்


கடந்த 2016-ம் ஆண்டு கவுதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வரும் 29-ம் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ்தான். தமிழகம் முழுக்க படத்தை ரிலீஸ் செய்யும் ஐசரி கணேஷ் மற்றொரு படத்தை இயக்கவும் கவுதம் மேனனிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

ஜோஷ்வா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பப்பி படத்தில் நடித்த வருண் நாயகனாக நடிக்க உள்ளார்.
சமீபத்தில் ஐசரி கணேஷ் தன்னுடைய படங்களின் வெற்றியை முதல்வர் பழனிச்சாமியை அழைத்து வந்து கொண்டாடினார்.

அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குநர் கவுதம் மேனன் பேசும்போது, ‘சிரிச்சு, ரசிச்சு படம் பண்ணி ரொம்ப நாளாகுது. என்னுடைய கஷ்ட சூழ்நிலையை அறிந்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான் என்னை அழைத்து பேசினார். எனை நோக்கி பாயும் படத்தின் ரிலீசுக்கு ஏற்பாடு செய்தவர், ஜோஷ்வா என்ற புதுப்படத்தையும் இயக்கும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார். இப்போதுதான், பழைய படி நான் சிரிக்கத் துவங்கி இருக்கிறேன்’ என்றார்.