பழிச்சொல்லில் இருந்து தப்பினார் சூர்யா..!


சினிமாவில் ராசி, சென்டிமென்ட் பார்க்காதவர்கள் ரொம்ப குறைவுதான்.. எங்கேயோ, எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது ஞாபகப்படுத்தின் ராசி பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அப்படி ஒரு ராசி விஷயத்தால் ஏற்படும் அவச்சொளில் இருந்து சூர்யா தப்பி உள்ளார்.. ஏன் கார்த்தியும் கூடத்தான் தப்பியுள்ளார்.

அப்படி என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா..? கடந்த ஜனவரி மாதம் ‘தோழா’ படப்பிடிப்பில் கார்த்தியுடன் முக்கிய வேடத்தில் நடித்துவந்த மலையாள நடிகை கல்பனா அவரது கடைசி நாள் படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக மரணத்தை தழுவினார். இதேபோல சூர்யாவின் ‘சிங்கம்-3’ படப்பிடிப்பின்போதுதான் மலையாள நடிகர் கலாபவன் மணியும் மரணத்தை தழுவி இருக்கவேண்டியது. நல்லவேளையாக அந்த துயர நிகழ்வு சூர்யாவின் படப்பிடிப்பில் நிகழவில்லை..

உண்மைதான்.. சிங்கம்-3’ படத்தில் மிக முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிக்க முதலில் கலாபவன் மணியைத்தான் அணுகினார்கள் ஹரியும் சூர்யாவும்.. ஆனால் அவரோ தனது உடல்நிலையை காரணம் காட்டி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.. ஆக்சன் காட்சிகளில் சண்டை, ரிஸ்க் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் என சூர்யா சொல்லியும் கூட மறுத்துவிட்டாராம் கலாபவன் மணி.

ஒருவேளை ஒரு அவர் ஒப்புக்கொண்டிருந்தால்..? கடைசியாக சூர்யாவின் படத்தில் நடித்துக்கொண்டிருந்த மலையாள நடிகர் கலாபவன் மணி இறந்துவிட்டார் என்கிற விதமாகத்தான் செய்தி பதிவாகி இருக்கும்.. தம்பி படத்தில் நடிக்கும்போது மலையாள நடிகை, அண்ணன் படத்தில் நடிக்கும்போது மலையாள நடிகர் மரணம் என முத்திரை விழுந்தால் அது காலத்திற்கும் அழிக்க முடியாமல் அல்லவா போயிருக்கும் என நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள் படக்குழுவினர்.