போலி கல்விச்சான்றிதழ் கயவர்களை அடையாளம் காட்ட வரும் ‘கணிதன்’..!


தினசரி நாளிதழ்களை திறந்தால் எப்படியாவது ஒரு போலி சான்றிதழ் மோசடி ஒன்று கண்ணில் பட்டுவிடும். பல அரசு துறைகளில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக இப்படி மாணவர்களுக்கும் இன்னும் சில அரைவேக்காட்டு ஆசாமிகளுக்கும் இந்த போலி சான்றிதழ் தான் கைகொடுக்கிறது.

ஆசிரியர்களில் கூட இப்படி போலி ஆசிரியர்கள் ஊடுருவியுள்ளது தான் கொடுமையிலும் கொடுமை.. இந்த போலி சான்றிதழ் உருவாக்கத்தின் ஆணிவேர் எது என்பதை அலசும் விதமாகத்தான் அதர்வா நடித்துள்ள ‘கணிதன்’ படம் உருவாகியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமி வெளியாக உலா இந்தப்படம் நிச்சயமாக சமூகத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.