ஆமா.. பீப் சாங் விவகாரம் எல்லாமா கடவுளோட லிமிட்ல வருது..?


சிம்புவின் பீப் சாங் விஷயத்தை பற்றி பொழுதன்னைக்கும் கிளறுவதற்கு என்ன இருக்கிறது.. இனிமேல் கிளறவேண்டாம் என நினைத்து அதை தூக்கி ஒதுக்கி வைக்க நினைத்த வேளையில் தான் சரியாக சிம்புவின் கோவை போலீஸ் ஸ்டேஷன் விஜயம் நிகழ்ந்திருக்கிறது.. வந்தார்.. கையெழுத்து போட்டார்.. கிளம்பிவிட்டார்..

இதற்குத்தான் இத்தனை நாள் ஆர்ப்பாட்டம்.. தலைமறைவு.. வழக்கு மேல் வழக்கு.. அப்பப்பா.. இதி கூத்து என்னவென்றால் அங்கே வந்துகூட நான், தவறேதும் செய்யவில்லை.. எல்லாம் மேல இருக்கிற அந்த ஆண்டவன் பார்த்துக்கிட்டு இருக்கிறான்… அவன் பார்த்துப்பான்” என கடவுளை ஜெர்க் அடிக்கிற மாதிரி வசனம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்.

ஆமா.. பீப் சாங் விவகாரம் எல்லாமா கடவுளோட லிமிட்ல வருது..?