விக்ரம் வாய்ப்பை பறித்த ‘10 எண்றதுக்குள்ள’ ரிசல்ட்..!

அப்படியென்ன வாய்ப்பே கிடைக்காமலா இருக்கிறார் விக்ரம்.. கிடைத்த வாய்ப்பு பறிபோனதே என்று கவலைப்பட என நீங்கள் கேட்கலாம்.. உண்மைதான்.. ஆனால் ‘1௦ எண்றதுக்குள்ள’ படத்தின் ரிலீசுக்கு முன்பே ஒரு இயக்குனரால் விக்ரமுக்கு கதை சொல்லப்பட்டு ஒகே ஆகி, அதற்கு தயாரிப்பாளரும் பக்காவாக தயாராகி இருந்த நேரத்தில் தான் ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் வெளியாகி வரவேற்பிலும் வசூலிலும் சொதப்பியது..

இதனால் விக்ரமை வைத்து படத்தை தயாரிக்க நினைத்த அந்த தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் தற்போது விக்ரமின் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாராம்.. விக்ரமுக்கு கதை சொல்லி ஒகே பண்ணிய இயக்குனர் அஜய் ஞானமுத்து (டிமாண்டி காலணி இயக்குனர்) தான் விக்ரமை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கைநழுவி போய்விட்டதே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம்.