ஜகா வாங்கினார் விஜய் ஆண்டனி..!


சினிமாவில் ஒரு கருத்தை சொலவது என முடிவெடுக்கிறார்கள்.. ஆனால் அதற்காக கடைசி வரை துணிந்து யாரும் போராடுவதாக தெரியவில்லை.. இடையில் கிளம்பும் எதிர்ப்புகளால் தனகல்து நிலைப்பாட்டை உடனே மாற்றிக்கொள்கிறார்கள்.. இதுதான் விஜய் ஆண்டனி நடித்துவரும் ‘பிச்சைக்காரன்’ படத்திலும் நடந்திருக்கிறது.

இப்படத்தில் ‘பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு’ என்ற சமூக விழிப்புணர்வு பாடலை ‘பிச்சைக்காரன்’ படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார். இதில் ‘கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்’ என்கிற வரி இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த பாடலுக்கு சில மருத்துவர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

எதிர்ப்பு தீவிரமானதால் ‘கோட்டா’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ‘காசு கொடுத்து’ என மாற்றி விட்டோம் என டக்கென இறங்கிவந்து மன்னிப்பு கேட்காத குறையாக விளக்கம் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான விஜய் ஆண்டனி.

மேலும் “இந்த பாடல் வரிகள் சிலரை புண்படுத்தி இருந்தால், அதற்கு என் ‘பிச்சைக்காரன்’ படக்குழுவின் சார்பாக நான் விளக்கமளிக்கிறேன்” என்றும் கூட தெரிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.. இதுகூட சொல்லாட்டி அப்புறம் படத்தை ரிலி பண்றதுக்குள்ள, கோர்ட்டு, கேஸுன்னு வில்லங்கத்தை சந்திக்கணுமே என்றுதான் ஜகா வாங்கினாராம் விஜய் ஆண்டனி.