காதலை பின் தள்ளிவிட்டு கடமைக்கு முன்னுரிமை கொடுத்த விஜய்சேதுபதி..!


விஜய்சேதுபதி நடித்து முடித்து, ‘காதலும் கடந்து போகும்’, ‘சேதுபதி’, ‘மெல்லிசை’ உட்பட மூன்று படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இதில் கிட்டத்தட்ட மெல்லிசை படத்தை வெளியிடுவது பற்றிய பேச்சையே விஜய்சேதுபதி தரப்பில் எடுப்பதே இல்லை.. மாறாக சிவி.குமார் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கியுள்ள ‘காதலும் கடந்துபோகும்’ படத்தின் ரிலீஸ் வேலைகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

வரும் காதலர் தினத்தன்று இந்தப்படத்தை வெளியிடுவதாக முடிவு செய்து வைத்திருந்த நிலையில் இப்போது அந்த திட்டத்தில் சின்ன மாறுதலாக அந்தப்படத்தை மார்ச் மாதம் ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்துவிட்டார்களாம். அதேசமயம் விஜய்சேதுபதியின் இன்னொரு படமான ‘சேதுபதி’ படத்தை இந்த மாதம் 19ஆம் தேதியே ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்..

இதற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக சேதுபதி படத்தை ரிலீஸ் செய்வது விஜய்செதுபதியின் நட்பு நிறுவனம் தான்.. சொல்லப்போனால் விஜய்சேதுபதி தான் அதன் மறைமுக உரிமையாளரும் கூட.. அதனால் ‘நாணு ரௌடி தான்’ படத்திற்குபின் தனது படத்தின் மேல் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் சூட்டோடு சூடாக முதலில் சேதுபதி’யை ரிலீஸ் பண்ணி காசு பார்க்க நினைக்கிறாராம்.

இன்னொரு காரணம் என்னவென்றால் விஜய் தற்போது அட்லி டைரக்சனில் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் ‘தெறி’ படத்தின் கதையும் ‘சேதுபதி’ படத்தின் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை என்றும் சொல்லப்பட்டு வருவதால், விஜய் படத்திற்கு முன்னதாக தனது படத்தை ரிலீஸ் பண்ணிவிட வேண்டும் என விஜய் சேதுபதி நினைத்தது தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.