“டி.ஆர்னா டி.ஆர் தான்யா” ; மெச்சும் திரையுலகம்..!


பெர்சனலாக யாருடைய வம்புதும்புக்கும் போகாதவர் தான் டி.ராஜேந்தர்.. அதேபோல தனது மகனின் எந்த செயல்களிலும் குறுக்கிடாமல் அவருக்கு முழு சுதந்திரமும் தந்திருக்கிறார்.. (அதுதான் சிம்புவை இந்த அளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளது என்பது வேறு விஷயம்).. அந்தவகையில் மகனின் காதல் விஷயத்தையும் அவர் ஜஸ்ட் லைக், லைட்டராகவே எடுத்துக்கொண்டார்..

சிம்பு, நயன்தாராவை காதலித்தபோது, நயன்தாரா எங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்தால் சந்தோசம் தான் என ஆரத்தி தட்டை தயார் பண்ணியவர் தான் டி.ஆர்.. அதன்பின் நயன்தாராவுடன் காதலை முறித்துக்கொண்டு ஹன்ஷிகாவுடன் சிம்பு காதலில் விழுந்தபோதும் ஹன்ஷிகாவையும் இதேபோலத்தான் வரவேற்றார். அந்த காதலும் புட்டுக்கொண்டபோது கூட பெரிதாக ரியாக்சன் எதுவும் காட்டவில்லை.

விஷயம் என்னவென்றால் ஜீவா, ஹன்ஷிகா நடித்துள்ள ‘போக்கிரி ராஜா ‘சிங்கிள் ட்ராக் வெளியீட்டிற்கு டி.ராஜேந்தரை அழைத்திருந்தார்கள்.. விழாவிற்கு வந்த டி.ஆரை பார்த்து அங்கிருந்த ஹன்சிகா வணக்கம் சொல்ல இவரும் பதில் வணக்கம் சொன்னார்..

தொடர்ந்து மேடையில் பேசும்போது ஹன்சிகாவை பற்றி குறிப்பிட்ட டி.ஆர், “வாலு படத்தை நானே வாங்கி வெளியிட முடிவுசெய்தபோது ஒரு பாடல் காட்சி எடுக்கவேண்டி இருந்தது.. ஹன்சிகாவின் கால்ஷீட் தேவைப்படுகிறது என சொல்லி அனுப்பினேன்.. சொன்னது டி.ஆர்.அங்கிளா என கேட்டு, கால்ஷீட் ஒதுக்கி அதற்காக காசு வாங்காமல் நடித்து கொடுத்த நல்ல மனம் ஹன்ஷிகாவுக்கு” என புகழ்ந்து தள்ளிவிட்டார்.

கூடவே போகிறபோக்கில் நான் வேறு யாரையோ சொல்கிறேன் என நீங்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என சைக்கிள் கேப்பில் நயன்தாராவையும் ஒரு காட்டு காட்டிவிட்டு போனார் டி.ஆர்.