நா.முத்துக்குமாருக்கு வரவேண்டிய பாக்கி ; மனைவிக்கு கிடைக்காமல் தடுப்பது யார்..?


தமிழ்த்திரையுலகில் கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆகியோருக்குப்பின் மிகவும் புகழ்பெற்ற, ரசிகர்களுக்குப் பிடித்த பாடல்களை கொடுப்பதில் நா.முத்துக்குமாருக்கு இணை அவரே தான். அவரது இடம் சினிமாவில் இனி யாராலும் நிரப்பப்படமுடியாத ஒரு வெற்றிடமாகவே இருக்கும். ஆனால் மரணமடைய வேண்டிய வயதா அவருக்கு..?

இந்த எதிர்பாராத சூழ்நிலையால் கலங்கிப்போயிருப்பது முத்தஊமாரின் மனைவிதான். நா.முத்துக்குமார் பாடல் எழுதிய வகையில் இன்னும் பல தயாரிப்பாளர்கள் அவருக்கு பாக்கித்தொகை தரவேண்டி இருக்கிறது. ஆனால் அதை முறைப்படி அவர் மனைவியின் கைகளுக்கு சென்று சேரவிடாமல் அவரது சகோதரர் தடுப்பதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக அந்தப்பணத்தை தாமே வாங்கிக்கொள்ள திட்டமிட்டு சில இடங்களில் பணம் வாங்கியும் விட்டார் என்றும் கூறப்படுகிறது. முத்துக்குமார் இறந்த சமயத்தில் பலரும் அவரது குடும்பத்திற்கு உதவிசெய்ய முன்வந்தபோது, “எங்களுக்குத் தேவையானவற்றை சேர்த்து வைத்தேச் சென்றிருக்கிறான்” என வாய்ச்சவடால் பேசியவர் தான் இவர்..

எனவே சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் இதில் தலையிட்டு பாக்கித்தொகை முழுவதும் அவரது மனைவிக்கே கிடைக்க வழிசெய்யவேண்டும் என்பதுதான் முத்துக்குமாரின் நண்பர்களது விருப்பம்.