சகாயத்தை அதிர்ச்சியடைய வைத்த லாரன்ஸ்


சமீபகாலமாக தமிழில் கையெழுத்து போட்டுவோம் என்கிற கோஷத்தை முன்னிறுத்தி பலர் தமிழுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். நடிகர் ஆரி இதை முனைப்புடன் முன்னெடுத்து நடத்தி வருகிறார். தவிர நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயமும் இதில் தீவிரம் கட்டி வருகிறார்.

சமீபத்தில் தமிழில் கையெழுத்திடுவோம் என்பதை வலியுறுத்தி கூட்டம் ஒன்று நடைபெற்றது. சகாயம் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் லாரன்ஸும் கலந்துகொண்டார். ஆனால் அவர் அந்த அரங்கத்திற்குள் வந்தபோது அவரது அடிப்பொடிகள் பலர் லாரன்ஸ் வாழ்க என கூச்சல் போட்டு அதை அரசியல் கூட்டம்போல ஆக்கினார்களாம்.

அதுமட்டுமல்ல, அந்த கூட்டத்தில் லாரன்சை பேச அழைத்தபோது, தான் கடைசியாக பேசுவதாக சொல்லி, மற்றவர்களை பேச சொன்னாராம். அதனால் வந்திருந்தவர்களும் அது தமிழ் கையெழுத்துக்கான கூட்டம் என்பதை மறந்து லாரன்ஸின் புகழ்பாட ஆரம்பித்து விட்டார்களாம். இதைக்கண்டு சகாயம் ஏ.ஏ.எஸ்ஸே அதிர்ச்சியாகிவிட்டாராம். எந்த விழாவுக்கு போகிறோம், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என லாரன்ஸ் மாஸ்டருக்கு தெரியாதா என்ன..?