விக்ரம் படத்திற்காக இரண்டுமுறை சுடப்பட்ட ஜெயம் ரவி படம் ..?


சில வருடங்களுக்கு முன் ஜெயம் ரவி நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளியான படம் ‘ஆதிபகவன்’.. ஜெயம் ரவி இந்தப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அட்டர் பிளாப் படமான இந்தப்படத்தில் இருந்து இரண்டு விஷயங்கள் வேறு படங்களுக்காக காப்பியடிக்கப்பட்டு இருக்கின்றன. அதுவும் இரண்டு முறையுமே விக்ரமின் படங்களுக்குத்தான் என்பதுதான் ஆச்சர்யம்.

முதல் விஷயத்தை பார்க்கலாம். வெளிநாட்டில் இருக்கும் ஜெயம் ரவியை திட்டமிட்டு மும்பைக்கு வரவழைப்பார்கள்… அதற்காக காதல் நாடகம் எல்லாம் ஆடுவார்கள்.. கடைசியில் பார்த்தால் மும்பையில் ரவுடியாக இருக்கும் ஜெயம் ரவிக்கு பதிலாக இவரை போலீசில் சிக்கவைத்து கொன்று விடுவதுதான் திட்டம்.. இப்போது புரிந்திருக்குமே இது விக்ரமின் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் சமந்தா போரஷனில் அப்படியே காப்பியடிக்கப்பட்டு வைக்கப்பட்டது என்று.

போகட்டும்.. இரண்டாவது விஷயம் டபுள் ஆக்சன். அந்தப்படத்தில் இரண்டு ஜெயம் ரவிக்களில் ஒருவர் திருநங்கை.. அல்லது பெண் தன்மை கொண்டவர் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.. இன்று வெளியான இருமுகன் ட்ரெய்லரில் இன்னொரு விக்ரமை பார்த்தபோது அட இவரும் திருநங்கை, போல, அதாவது பெண்சாயலில் இருக்கிறாரே என்கிற ஆச்சர்யம் ஏற்படாமல் இல்லை. அந்த ஜெயம் ரவியைப்போலவே இவரும் வில்லன் தான்.

ஒருவேளை ஓடாத வண்டியில் இருந்து நல்ல ஸ்பேர் பார்ட்ஸ்களை மட்டும் கழட்டி வேறு வாகனத்திற்கு பயன்படுத்திக்கொள்வதுபோல, ஓடாத சினிமாவில் இருந்து புது விஷயங்களை மட்டும் சுட்டுக்கொள்ளலாம் என நினைத்து விட்டார்களோ. என்னவோ.?