அமலாபாலுக்கும் சமந்தாவுக்கும் ‘வடசென்னை’ தந்த பரிசு’..!


ஒரே படம். அதில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு.. வந்த வாய்ப்பை முதல் நபர் வேண்டாம் என்கிறார்.. காரணம் திருமண வாழ்க்கையின் வசந்த வாசலை திறந்து உள்ளே நுழைய போகிறார் என்பதால்.. அடுத்தவர் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார்.. ஆனால் தனது திருமண வாழ்க்கையின் மகிழ்சிக்கதவுகளை தானே சாத்திக்கொள்கிறார்.. என்ன வினோதம் பார்த்தீர்களா..?

தனுஷ் நடிக்கும் வடசென்னை படம் தான் அது. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சமந்தாவைத்தான் கேட்டார்கள்.. அவரோ தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகவேண்டும் என்பதற்காக அந்தப்பட வாய்ப்பை தவிர்த்தார்.. அதுமட்டுமல்ல, இன்னும் சில வாய்ப்புகளை தவிர்த்துவிட்டாராம். காரணம் மணவாளன் வீட்டினர் சமந்தா தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்லை.

ஆனால் அடுத்ததாக ‘வடசென்னை’ நாயகி வாய்ப்பு அமலாபாலிடம் போயிருகிறது. ஏற்கனவே தனுஷுடன் நடித்தவர், தனுஷ் தயாரிப்பிலும் சமீபத்தில் நடித்தவர்.. அவருக்கு இந்த வாய்ப்பை மறுக்க மனம் இல்லை.. காரணம் புகழ் போதை.. ஆனால் ஏற்கனவே அவர் படங்களில் நடித்து வருவது அவரது கணவர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை..

கிட்டத்தட்ட மனக்கசப்பு ஏற்பட்டு, ஆனால் மனம் விட்டு ஒருமுறை பேசினால் சரியாகிவிடும் என்கிற நிலையில் தான் இந்த ‘வடசென்னை’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அமலாபால். படம் பீரியட் படமாக உருவாக இருப்பதால் படப்பிடிப்பு முடிய ஒரு வருடத்திற்கு மேலேயே ஆகும்.. ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் அமலாபால் குழந்தை பற்றிய கவனத்திற்கே வராததில் விஜய் வீட்டினருக்கு கோபம்.

இந்தப்படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டால் குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்கு குழந்தையை பற்றிய நினைப்பே வீட்டினருக்கு வரக்கூடாது.. இந்த இடத்தில் தான் மனதளவில் பலமாக அடிபட்டார் விஜய்.. இதுதான் அமலாபாலை விட்டு பிரியும் முடிவை எடுக்க அவரை தூண்டியது. ஆக இந்த வடசென்னை படம் சமந்தாவின் மண வாழ்க்கைக்கு முன்னுரையையும், அமலாபாலின் திருமண வாழ்க்கைக்கு முடிவுரையும் எழுதியிருக்கிறது என்றால் நூறு சதவீதம் உண்மை தான்.