அமலபாலுக்கு மறைமுக தடையின் பின்னணியில் இருப்பது இவரா..?


தற்போது அமலாபாலுக்கு தமிழ் திரையுலகில் ஒரு அறிவிக்கப்படாத ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும் ஏ.எல்.விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனின் நட்புக்காக மற்ற தயாரிப்பாளர்கள் இதனை செய்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. ஆனால் அதுமட்டுமே முழு உண்மையல்ல.. இதன் பின்னணியில் சூப்பர்ஸ்டார் ரஜினி இருக்கிறார் என்றும் ஆனால் அவர் அறியாமலேயே இந்த தடை உத்தரவு மறைமுகமாக அமலாகி இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. அதற்காக சில காரணங்களும் கூறப்படுகின்றன.

ரஜினி எப்போதுமே திருமண பந்தத்தை மிகவும் புனிதமாக கருதுபவர்.. எந்த நிலையிலும் கணவன் – மனைவி, அதிலும் காதலித்து கரம் பிடித்தவர்கள் திருமண பந்தத்திற்கு உண்டான கண்ணியத்தை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர்.. தனது சொந்த வாழ்க்கையிலும் அதை கடைபிடித்து வருபவர்.. அதனாலேயே காதலித்து ஆசை ஆசையாய் திருமணம் செய்துகொண்ட ஏ.எல்.விஜய்யை இரண்டே வருடத்திற்குள் அமலாபால் விவாகரத்து செய்ததை அவர் அவ்வளவாக ரசிக்கவில்லை..

இரண்டாவது காரணம் நன்றாக குடும்பம் நடத்தும் கணவன்-மனைவிக்குள் இன்னொரு பெண் புகுந்து தேவையில்லாத சலசலப்பை ஏற்படுத்துவதையும் அவர் எப்போதும் விரும்பியதில்லை.. சொல்லப்போனால் அதற்கு எதிரான மனோபாவம் கொண்டவர். ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்தது அமலாபாலின் சொந்த விஷயம் என்றாலும் கூட, அவரது விவாகரத்தின் பின்னணியில் பூதாகரமான காரணமாக கிசுகிசுக்கப்பட்டு வருவது அமலாபாலுக்கும் தனுஷுக்குமான நட்புதான்.

அதனால் சூப்பர்ஸ்டாரின் நலம் விரும்பிகளாக உள்ள தயாரிப்பாளர்கள் தான் அவர் கேட்டுக்கொள்ளாமலேயே, அவருக்காக, அவரது மகள் நல்வாழ்க்கைக்காக அமலாபாலுக்கு மறைமுக ரெட் கார்டை அமல்படுத்தி இருக்கிறார்களாம். இதன்மூலம் அவரை கேரளாவுக்கே அனுப்பி வைப்பதுதான் அவர்கள் திட்டமாம். முன்பு ரஜினியை சீண்டினார் என்பதற்காக மனோரமாவையே திரையுலகை விட்டு ஒதுக்கிவைத்தவர்களுக்கு அமலாபால் எம்மாத்திரம்..?