தெறி 100வது நாள் ‘புஸ்வாணம்’ ஆகிவிடுமே ; கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்..!


விஜய் நடித்த ‘தெறி’ படம் கடந்த ஏப்ரல்-14ஆம் தேதி வெளியானது அல்லவா.. இதுநாள் வரை தமிழில் இந்த வருடத்தின் வசூல் ரீதியான மிகப்பெரிய வெற்றிப்படமும் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் சில தியேட்டர்களில் ‘தெறி’ படம் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் சரியாக ஜூலை-22ஆம் தேதிதான் 100வது நாளை தொடுகிறது.

ஆனால் அதே தேதியில் தான் சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ படம் வெளியாகிறது. தனது முந்தைய படம் 100வது நாளை தொடும்போது தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்வது சென்டிமென்ட்டாக தயாரிப்பாளர் தாணுவுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளதாம்.

ஆனால் விஜய் ரசிகர்களோ வேறுமாதிரி வருத்தத்தில் இருக்கிறார்களாம்.. தங்களது ஹீரோ படத்தின் 100வது நாளை அவர்கள் வெளியிலும் சமூக ஊடகங்களிலும் பிரமாண்டமாக கொண்டாடலாம் என நினைத்திருந்தர்களாம்.. ஆனால் அதே நாளில் கபாலி வெளியாவதால், அனைவரின் கண்களும் ‘கபாலி’ மீதுதான் இருக்கும்..

அதனால் விஜய்யின் படம் 100வது நாள் என்பது ஒரு விஷயமே இல்லை என்பது போல தங்களது கொண்டாட்டம், அதற்கான செலவு என எல்லாமே புஸ்வாணமாக போய்விடும் என்பதுதான் விஜய் ரசிகர்களின் கலக்கமாக இருக்கிறது.