ஆலுமா டோலுமா.. அனிருத்தின் கோலுமால்..!


சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ஈபா’ விருது வழங்கும் விழாவில் அனிருத் கலந்துகொண்டார்.. சிறந்த இசைக்காக இவருக்கும் ஒரு விருது கிடைத்தது… அது விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு பதிப்புக்காகத்தான். மேடையில் விருது வாங்கியவரிடம் ஒரு பாட்டு பாடிவிட்டு போகச்சொன்னார்கள் (பீப் சாங் அல்ல).

அதற்கு அவர் கத்தியில் இருந்து ஒரு பாட்டை பாடுவார் என பார்த்தால் அவர் பாட்டுக்கு ‘ஆலுமா டோலுமா’ என வேதாளம் அஜித்தின் பாடலை பாட ஆரம்பித்துவிட்டார். ஏன்யா விருது வாங்கினது எங்காளு படத்துக்கு.. பாடுறது எதிராளி படத்துக்கான்னு விஜய் ரசிகர்கள் பேஸ்புக், டிவிட்டர்ல காய்ச்சி எடுத்துட்டாங்களாம்.