மதன் ஜாமீனில் வெளியே வந்தாச்சு… சிக்கலில் வேந்தர் மூவிஸ் சிவா..?


வேந்தர் மூவிஸ் தயாரிப்பாளர் மதன் திடீரென காணமல் போய் கண்ணாமூச்சி நாடகம் ஆடி சமீபத்தில் தான் திருப்பூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒருவழியாக இப்போது அவருக்கு பத்து கோடி ரூபாய் பிணையாக கொடுத்து நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்..

மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் வாங்கித்தருவதாக அவர் சுருட்டிய பணனத்தில் கொஞ்சம் வேந்தர் மூவிஸ் மூலமாக திரைப்படங்களை தயாரிப்பதற்காக உள்ளே இறக்கியிருந்தார்.. இந்த நிர்வாகத்தை எல்லாம் கவனித்து வந்தவர் தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருக்கும் தி.சிவா தான்.

மதன் வெளியே வந்துள்ளதால் இனி வருமான வரித்துறை மற்றும் போலீசாரின் பார்வை சிவாவின் மீது திரும்புவதற்கு வாய்ப்பிருக்கு என்று சொல்லப்படுகிறது. தவிர மதன் தலைமறைவாக இருந்த காலத்தில் அவர் பற்றிய எந்த ஆதரவான கருத்துகளையும் சிவா கூறாததால் அவர் மெது கோபத்தில் இருக்கும் மதன் சிவாவை இந்த சிக்கலில் கோர்த்துவிட முயற்சி செய்வார் என்றும் சொலப்படுகிறது.