வேலைக்காரன் விழாவில் அரசியல் பேசிய மோகன்ராஜா..!


சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என பலர் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாக்காரர்களுக்குத்தான் அரசியலுக்கு வர அதிக தகுதிகள் இருக்கிறது என வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பாக திரி கொளுத்தியுளார் இயக்குனர் மோகன்ராஜா. இதுபற்றி அவர் கூறியதாவது,

“உழைப்பை நம்பி வாழும் வேலைக்காரர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம். எங்கு போனாலும் தனி ஒருவன் மாதிரி படம் பண்ணுங்க என்று பலரும் சொல்கிறார்கள். சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அரசியலுக்கு வர சினிமாக்காரனுக்கு தான் எல்லா தகுதியும் உண்டு. மக்கள் உணர்வுகளை அதிகம் புரிந்தவர்கள் கலைஞர்கள் தான்” என கூறினார் மோகன்ராஜா.