வில்லனாக களமிறங்கும் பிரபல இயக்குனர்


தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை இயக்கிய பிறகு இயக்குனர் பா. ரஞ்சித் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதாக தகவல் வெளியானது. பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் ஹாலிவுட் படத்திற்கு முன்னதாக தமிழில் இயக்குனர் ரஞ்சித் திரைப்படம் எடுக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தப்படம் குத்துச்சண்டை வீரர்கள் பற்றிய படமாக இருக்கும் எனவும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

‘சல்பேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஆர்யா இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

வில்லனாக இயக்குனர் மகிழ்திருமேனி நடிக்கிறார். கதாநாயகன் ஆர்யா கதாபாத்திரத்துக்கு இணையாக மகிழ்திருமேனியின் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இவர் டெடி படத்திலும் ஆர்யாவுடன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.