ஜி.வி.பிரகாஷ் இறங்கி வந்தது விஜய்க்காகவா..? அட்லீக்காகவா..?


நடிகராக மாறிவிட்ட ஜி.வி.பிரகாஷ் முன்னெப்போதையும் விட பிஸியாக இயங்கி கொண்டு இருக்கிறார்.. நடிக்கப்போய் விட்டோம் என்பதற்காக இசையுலகை விட்டு ஒதுங்கிவிட கூடாது என்பதற்காக அவ்வப்போது தனது படங்களுக்கும் மற்றும் நட்பு வட்டாரத்தில் உள்ள ஒரு சிலரின் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வருகிறார்..

அந்த விதத்தில் தான் விஜய்யின் தெறி படத்திற்கும் இசையமைத்தார்.. அது ஜி.வி.பிரகாஷின் 50வது படமும் கூட.. ராஜாராணி’ வெற்றியை தொடர்ந்து அட்லி தனது ‘தெறி’ படத்துக்கும் விஜய்தான் இசையமைக்கவேண்டும் என பிடிவாதமாக நின்றார்.. விஜய்யும் அதற்கு ஒப்புதல் தந்தார்..

அதேபோல இப்போது அடுத்ததாக விஜய்யை வைத்து தான் இயக்கவுள்ள படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஜி.வியோ படங்களில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தாராம்.. ஆனால் விஜய்யிடமிருந்தும் போன்கால் வரவே, தவிர்க்கமுடியவில்லையாம்.. ஆக இரண்டு பேரையுமே திருப்திப்படுத்தும் முடிவைத்தான் ஜி.வி.பிரகாஷ் எடுத்துள்ளார்.