முந்திரிக்கொட்டை காயத்ரி ; பழிவாங்க தயாரான சேனல் நிர்வாகம் ..!


பிக்பாஸ் நிகழ்சியில் இந்த வாரம் வெளியேறுபவர்கள் பட்டியலில் காயத்ரி, ரைசா என இருவர் இருந்தாலும் அதில் காய்த்ரிக்கே அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இன்று புதிதாக காட்டப்படும் புரமோவில் கமல் ஒரு பெயரை ஆடியன்ஸிடம் காட்டுகிறார்.. பார்வையாளர்களின் கரகோஷம் அதிர்வதை வைத்தே அது காயத்ரி வெளியேற்றப்படுகிறார் என்பதற்கான அடையாளமாகவே ரசிகர்களுக்கு ஓரளவு புரிந்துவிட்டது.

ஆனால் அதேசமயம் காலை முதல் ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த புரோமோ வீடியோவை பிக்பாஸ் வீடியோ என்கிற ட்விட்டர் தளத்தில் பதிவேற்றி இருந்தார்கள்.. இந்த வீடியோ பதிவுகுறித்து காலையிலேயே காயத்ரியும் பதிலுக்கு ட்வீட் செய்த விஷயம் ஒன்று ஆதாரத்துடன் வெளியானது.

காயத்ரியின் வெளியேற்றம் குறித்த தகவல் வழக்கமாக இன்று இரவு நடைபெறும் நிகழ்ச்சியில் கமல் மூலமாக மட்டுமே வெளியே தெரிய வேண்டும்.. அதுதான் பிக்பாஸ் விதி.. ஆனால் நேற்று ஒளிபரப்பப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் முதல் நாளே ரெக்கார்டு நடந்தவை என்பதால் கணக்கின்படி காயத்ரி சனிக்கிழமையே நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து கிளம்பி விட்டார் என்றே அர்த்தம்..

வீட்டில் இருந்ததால் அவரது மொபைல்போன் அவருடைய கைக்கு வந்திருக்கும் தானே.. அதனால் தான் அந்த புரமோ வீடியோவுக்கு ட்வீட் செய்து தான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்பதை முந்திரிக்கொட்டை தனமாக காட்டிக்கொடுத்துவிட்டார்..

பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றை இந்த நிகழ்ச்சி முடியும் வரை வெளியில் சொல்லக்கூடாது என்பதும் முக்கியமான விதி. ஆனால் காயத்ரியின் முந்திரிக்கொட்டை தனத்தால் அவரால் ஒருநாள் கூட அதை கடைபிடிக்க முடியவில்லை..காயத்ரியின் இந்த செயலால் முன்கூட்டியே சஸ்பென்ஸ் உடைந்ததால் காயத்ரி மீது கோபத்தில் இருக்கிறதாம் விஜய் டிவி தரப்பு.

இதனால் இனிவரும் நாட்களில் குறும்படம் மூலமாக ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்தபோது காயத்ரி செய்த சில அடாவடிகளை ஒளிபரப்பி அவரது இமேஜை இன்னும் டேமேஜ் ஆக்க முடிவு செய்துள்ளதாம் சேனல் நிர்வாகம்.