“ஆர்யாவுக்கு இதே வேலையா போச்சு” – சலித்துக்கொள்ளும் ஹீரோயின்கள்..!


சினிமா சம்பந்தப்பட்ட ஒரு விழாவோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்போ எதுவானாலும் அங்கே ஆர்யா இருந்தால் களைகட்டும்.. கலாட்டாவாக பேசும் ஆர்யா சமயத்தில் தன்னுடன் நடித்த நடிகைகளை மேடையிலேயே கலாய்த்து கைதட்டலை அள்ளுவார்.. மொழி தெரியாத நடிகைகள் என்றால் பேந்தப்பேந்த முழிப்பார்கள்..

இப்படித்தான் விஷாலின் ‘ஆம்பள’ பட இசை வெளியீட்டில் கலந்துகொண்டவர், மேடையில் பேசியபோது அங்கே அருகில் இருந்த ஹன்ஷிகாவை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். அதாவது ‘மீகாமன்’ படத்தில் அவருடன் ஹன்ஷிகா ஜோடியாக நடித்துக்கொண்டிருந்தபோது, பேச்சுவாக்கில் விஷாலுடன் ஒரு படம் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக ஆர்யாவிடம் சொன்னாராம். படத்தின் டைட்டில் என்னவென்று ஆர்யா கேட்க அதற்கு ஹன்ஷிகா ‘அம்பாலா’ என்று சொன்னாராம்.

“அம்பாவாவா..? தமிழ்ல அப்படி ஒரு வார்த்தை இருக்கிற மாதிரி தெரியலையேன்னு விஷால்கிட்ட போனை போட்டா, மச்சி அது ‘ஆம்பள’டான்னு விஷால் சொல்றான்.. அப்பத்தான் தெரிஞ்சது நம்ம ஹன்ஷிகா தான் டைட்டிலை மாத்திருக்காங்கன்னு” இப்படி ஹன்ஷிகாவை கலாய்த்து பேசி கைதட்டலை அள்ளினார்..

விவரம் புரியாத ஹன்ஷிகாவுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த குஷ்பு விளக்கம் சொல்ல செல்லமாக ஆர்யாவை முறைத்தார் ஹன்ஷிகா.. இது பழைய கதை.. இப்போது சமீபத்தில் ஆர்யாவின் கலாய்ப்பில் சிக்கியவர் ஸ்ரீதிவ்யா..

‘பெங்களூர் நாட்கள்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஸ்ரீ திவ்யா, படத்தின் இசையப்பற்றி புகழ்ந்து நீண்ட நேரம் பேசினார்.. அதன்பின் பேசவந்த ஆர்யா, “ஸ்ரீதிவ்யா இவ்வளவு நேரம் பேசி நான் பார்த்ததே இல்லை.. படத்தின் இசையைப்பற்றி அவ்வளவு அழகாக பேசினார்.. ஆனால் இங்கே உள்ளே நுழைவதற்கு முன் என்னிடம் போஸ்டரில் கோபிசுந்தர் என பெயர் போட்டிருக்குதே அது யாருன்னு கேட்டாருங்க” என ஸ்ரீதிவ்யாவை கோர்த்துவிட அதற்கு ஆர்யாவை செல்லமாக முறைத்தார் ஸ்ரீதிவ்யா..

பின்னே செல்லமாகத்தானே முறைக்க முடியும்.. பேசியது ஆர்யாவாச்சே.. அதுசரி யார் அந்த கோபிசுந்தர்னு கேட்குறீங்களா..? அவர்தாங்க இந்தப்படத்தோட இசையமைப்பாளர். ஸ்ரீதிவ்யா அது கூட தெரியாம படத்துல நடிச்சிருக்காருன்னு தான் கலாய்ச்சுப்புட்டார் ஆர்யா. இதனால் இனி ஆர்யா கலந்துக்குற பங்ஷன்னாலே உஷாரா இருக்கணும்ங்கிற நிலைமைய உருவாக்கிட்டாரு.