முதல் பட ரிசல்ட் : அதிர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!

இதற்கு முன், அதாவது கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் சிம்ரன் அறிமுகமானபோது, ஒரே நேரத்தில் ‘நேருக்கு நேர்’, ‘வி.ஐ.பி’, ‘ஒன்ஸ்மோர்’, ‘பூச்சூடவா’ என நான்கு படங்களில் நடித்தார். நான்கு படங்களும் ஒரே வருடத்தில் வெவ்வேறு தேதிகளில் முன்னே பின்னே ரிலீசாகின. நான்குமே வெற்றியும் பெற்றன.

அதை தொடர்ந்து சிம்ரனுக்கு கிடைத்த வரவேற்பால் ஒவ்வொருவரும் நாங்கள் தான் சிம்ரனை அறிமுகம் செய்தோம் என கூறி பெருமைப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.. அப்போது சிம்ரனுக்கு கிடைத்த அதேபோன்ற வாய்ப்பு, அதற்கடுத்து இப்போது மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தான் கிடைத்தது..

மலையாளத்தில் திலீப்புடன் இவர் நடித்த ‘ரிங் மாஸ்டர்’ படத்தை பார்த்தவர்கள் இவரது எளிமையான அழகில் மயங்கிப்போனார்கள். இவரது அம்மா மேனகாவும் தமிழ் நடிகை என்பது இவருக்கு கூடுதல் தகுதியாகிப்போனது.

முதலில் சிவகார்த்திகேயனுடன் ‘ரஜினி முருகன்’ படத்திள் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த கீர்த்தி சுரேஷ், அடுத்து விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தொடர்ந்து ‘பாம்பு சட்டை படத்தில் சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்ப்பையும் ஏற்றார். அடுத்து இயக்குனர் டீகேவின் ‘கவலைவேண்டாம்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுதவிர இன்னும் இரண்டு படங்களிலும் கையெழுத்து போட்டுள்ளார். தமிழில் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு இந்த அளவுக்கு வரவேற்பு இருப்பது கண்டு சீனியர் நடிகைகளே பொறாமைப்பட்டனர். ஆனால் சில தினங்களுக்கு முன் கீர்த்தி சுரேஷின் முதல் படமாக வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் ரிசல்ட் கீர்த்தியையும் அவரது அம்மாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

படம் ரொம்ப ஆவரேஜ் லெவலில் இருப்பதாகவும், படத்திற்கு பெரிதாக கிடைக்காத வரவேற்பு நடிகையின் ராசியையும் கொஞ்சம் உரசிப்பார்க்கவே செய்யும் என சிலர் கீர்த்தியிடம் பயம் காட்டியுள்ளார்கள். இதனால் அடுத்து ரிலீஸாக இருக்கும் ரஜினி முருகன் படமாவது தனக்கு நல்வழிகாட்ட வேண்டும் என கடவுளை கும்பிட ஆரம்பித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்..