என்னது இரண்டாம் பாகமா..? திகிலில் ரசிகர்கள்..!

ஒரு படம் முடிந்து க்ளைமாக்ஸ்ல இன்னும் ட்விஸ்ட்டோட ஒரு படத்தை முடிக்கிறாங்கன்னா அதுக்கு ரெண்டாம் பாகம் எடுக்கலாம்.. இல்லைன்னா, என்ட் கார்டு போடும்போது அடடா படம் சீக்கிரம் முடிஞ்சுருச்சே என ஏக்கப்பெருமூச்சு விட்டு ரசிகர்கள் வெளியே வர்றாங்க பாருங்க.. அந்தப்படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்கலாம்.

ஏண்டா உள்ள வந்தோம்..? எப்படா படத்தை முடிப்பீங்கன்னு ரசிகர்கள் கதறாத குறையா ஒரு படத்தை பார்த்துட்டு தியேட்டரை விட்டு வெளியே வர்றாங்க.. அந்தப்படத்துக்கு போய் இரண்டாம் பாகம் எடுக்கப்போறாங்கன்னு செய்தி வெளியானா ரசிகர்களுக்கு திகில் கிளம்பாம என்ன பண்ணும்..?

சரி எடுக்குறதுன்னு முடிவு பண்ணுனா கதையில்லாமல் படம் எடுப்பது எப்படி..?, நல்ல நடிகரின் இமேஜை டேமேஜ் பண்ணுவது எப்படி..?, காதை மூடி கேட்பது எப்படின்னு சரக்கே இல்லாத அந்த டைரக்டரயாவது மாத்துங்கய்யா என்கிற புலம்பல் தான் கோடம்பாக்கத்தில் அதிகம் கேட்கிறது. சாதா(ரண) ரசிகனின் குரல் வி.ஐ.பிக்கு கேட்குமா..?