மணிரத்னம் பட ரிலீஸுக்கு சிம்புவால் சிக்கல்


மணிரத்னம் தற்போது செக்க சிவந்த வானம் படத்தை இயக்கி முடித்துவிட்டார்..படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் படத்தை விலைபேசி ஆரம்பித்த லைகா நிறுவனத்திற்கு வினியியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்..

ஆம். சிம்பு படத்தை நாங்கள் வெளியிட மாட்டோம் என அவர்கல் கூறினார்களாம். காரணம் சிம்புவை வைத்து மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை வாங்கி நிறையும் நாட்டப்பட்டு விட்டார்களாம். அதனால் மைக்கேல் ராயப்பனிடம் நஷ்ட ஈடு கேட்க, அவரோ நஷ்டஹத்தை ஈடுகட்ட சிம்பு ஒரு படம் நடித்து தருவதாக வாக்களித்திருந்தார்.. அதன்படி அவர் நடித்து தந்தாள் அந்தப்படத்தை வெளியிடும்போது தான் நட்டத்தை செட்டில் செய்வதாக கூறிவிட்டாராம்.

இதனால் சிம்பு மீது அதிருப்தியான விநியோகஸ்தர்கள் தரப்பு, தற்போது அவர் நடித்து வெளிவர இருக்கும் படம் என்பதால் செக்க சிவந்த வானம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் மறைமுக ரெட் கார்டு போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனையில் அவர்களுக்கு சாதகமாக ஏதாவது கொஞ்சமாவது நடந்தால் தான் படம் ரிலீசாகும் போல தெரிகிறது.

முப்பெல்லாம் சிம்புவால் படப்பிடிப்பு நடத்துவதுதான் பிரச்சனையாக இருந்து வந்தது.. ஆனால் மணிரத்னம் படம் என்பதால் செக்க சிவந்த வானம் படப்பிடிப்புக்கு எந்தவிதஹ் சிரமும் அவர் கொடுக்கவில்லை. ஆனால் சிம்புவாள் தற்போது வேறு ரூட்டில் பிரச்னை வெடித்துள்ளது எதிராபாரத ஒன்று.