நயன்தாரா கூட ஜோடினா.. இனி மலையாள படத்துலதான் நடிக்கணும் போல..!

‘யான்’ படத்திற்குப்பின் ஒரு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா என்று ஒருதகவல் வெளியானது தெரியுமா..? ராம்நாத் என்பவர் இயக்கும் இந்தப்படம், ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ மாதிரி பக்கா காமெடி சப்ஜெக்ட்டாக தயாராக இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆச்சர்யமான விஷயமாக 2௦௦6ல் வெளியான ‘ஈ’ படத்தை தொடர்ந்து எட்டு வருடங்கள் கழித்து நயன்தாராவுடன் மீண்டும் ஜோடியாக நடிக்க இருப்பதால் மிகவும் குஷியானார் ஜீவா..

ஆனால் இப்போது அந்தப்படம் ஒரு இன்ச் கூட அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ந்ததாக தெரியவில்லை.. விசாரித்ததில் அந்தப்படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. காரணம் நயன்தாரா கேட்ட சம்பளம் தான்.. ஒன்றல்ல, இரண்டல்ல.. நான்கு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார் நயன்தாரா..

ஜீவா சம்பளம், நயன்தாரா சம்பளம், மற்றவர்களின் சம்பளம், படப்பிடிப்பு செலவு எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்த படத்தின் தயாரிப்பாளர் மயக்கம்போடாத குறைதான். குறிப்பாக நயன்தாராவுக்கு இரண்டு கோடி வரை தருவதாக சொல்லிப்பார்த்தும் கூட, நயன்தாரா இறங்கி வராததால், உடனடியாக அந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்.

இதில் என்ன பியூட்டி என்றால், வெளிநாட்டில் ஏரோபிளேன் ஓட்டினாலும், சொந்த ஊரில் உள்ள தனது தோட்டத்திற்கு வரும்போது எருமை மாட்டு ஓட்டும் மனிதர்கள் சிலரும் இருக்கிறார்களே.. அவர்களைப்போல, நயன்தாரா தனது சொந்த பாஷையான மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்துள்ள ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்துக்கு வாங்கிய சம்பளம் வெறும் 5௦ லட்சம் தானாம்.

ஏனென்றால் மலையாள சினிமா பட்ஜெட் நிலைமை அப்படி.. அப்படியானால் நயன்தாராவுடன் நடிக்கவேண்டுமானால் இனி மலையாளப்படங்களில் நடித்து, அதை தமிழில் டப்பிங் பண்ணித்தான் நம்ம ஊரில் உள்ள சில இளவட்ட நடிகர்கள் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும்போல தான் நிலைமை மாறிவிட்டது.. இதை அந்த ஈ நடிகரும் புரிந்துகொண்டிருப்பார் என்றே தெரிகிறது.