காஜல் vs சமந்தா ; லூசுத்தனமான கேரக்டர்களில் நடிக்க போட்டா போட்டி..!

கதையை பொறுத்தவரை தமிழ்சினிமா பல புதிய முயற்சிகளை நோக்கி பயணப்பட்டு வரும் இந்த வேளையில், சில இயக்குனர்கள் தங்களது படத்தின் கதாபாத்திரங்களை இன்னும் புராதன காலத்து கேரக்டர்களாகவே சித்தரித்து வரும் கொடுமையும் நடக்கவே செய்கிறது. குறிப்பாக கதாநாயகிகளுக்கென சில இயக்குனர்கள் டிசைன் பண்ணும் ‘அருக்காணி’ டைப் கேரக்டர்களுக்காகவே அவர்களை நாடு கடத்தலாம்.

படம் ஆரம்பம் முதற்கொண்டு இறுதிவரை ஒரு கதாநாயகி விளையாட்டு பெண்ணாகவே…. இல்லையில்லை அப்படிக்கூட சொல்லக்கூடாது. படம் முழுதும் லூசுப்பெண்ணாகவேவா இருப்பார். கொஞ்சம் கூட சுயபுத்தி இருக்காதா..? அதிலும் இப்படிப்பட்ட கேரக்டர்களை உள்வாங்கி நடிப்பதில் தற்போது சமந்தாவுக்கும் காஜல் அகர்வாலுக்கும் தான் போட்டாபோட்டியே நடக்கிறது.

ஆல் இன் ஆல் அழகுராஜா, துப்பாக்கி, ஜில்லா, மாரி என காஜல் நடித்த படங்களை வரிசையாக எடுத்து அதில் அவர் வரும் காட்சிகளை எல்லாம் பாருங்கள்.. எல்லா படங்களிலும் விஜய்யாலோ, தனுஷாலோ, கார்த்தியாலோ மட்டம் தட்டப்படுவார், கடைசிவரை ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பார்.. எல்லா காட்சிகளிலும் ஒரே ரியாக்சன்களை காட்டுவார்.. அவ்வளவுதான் பேமெண்ட் வாங்கிக்கொண்டு பறந்துவிடுவார்.

சமந்தா மட்டும் சளைத்தவரா என்ன..? அஞ்சான், கத்தியில் இருந்து இப்போது வெளியாகியிருக்கும் ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் வரையிலும் ஒரே மாதிரி ரியாக்சன்களை மட்டுமே காட்டுகிறார் சமந்தா..

உண்மை கசக்கும் என்றாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்.. ‘1௦ எண்றதுக்குள்ள’ படம் ரசிகர்களை எரிச்சலடைய விதத்தில் சமந்தாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. ஐயா இயக்குனர்களே.. ஹீரோயின்களை வீர தீர சூரியாகவெல்லாம் காட்டவேண்டாம்.. அவர்களும் சுயசிந்தனை உள்ளவர்கள் தான் என்பதை இயல்பாகவே காட்டினால் போதும் என்கிறார் ரசிகர்கள்.