விஷாலுக்கு பயந்து ரிலீஸ் தேதியை மாற்றிய சரத்குமார்..!


சரத்குமார் நடித்த ‘சென்னையில் ஒருநாள்’ ஓரளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்தப்படத்தின் இரண்டாம் பாகமும் சரத்குமாரை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை செப்-15ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்தார்கள்.

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் வரும் செப்-14ல் ரிலீஸ் என அறிவிப்பு வெளியாகி தியேட்டர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன.. குறிப்பாக விஷால் படத்திற்கு 5௦௦ தியேட்டர்கள் வரை புக் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, ஜோதிகா நடித்துள்ள மகளிர் மட்டும் படமும் இதே செப்-15ல் ரிலீஸாக உள்ளது

அந்தப்படத்திற்கும் சுமார் 3௦௦ தியேட்டர்கள் புக்காகி உள்ளன. இந்தநிலையில் சரத்குமார் படத்திற்கு மிகவும் குறைவான தியேட்டர்களே கிடைக்கும் சூழல் உருவானது.. இதனால் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிவிட்டார் சரத்குமார். “இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதேசமயம் நடிகர்சங்க விவகாரத்தில் சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நடந்த அதிரடி போட்டி நாடறிந்த ஒன்று.. அதனால் தனது படத்தை இப்போது ரிலேஎஸ் செய்து படம் சரியாக போகாவிட்டாலோ, அல்லது வசூலில் பிரகாசிக்காவிட்டாலோ அது இன்னும் ஒரு கரும்புள்ளியாகிவிடும் என நினைத்து தான் தேதியை மாற்றியதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.