தரக்குறைவாக திட்டினார் ஆதிக் ; நஸ்ரியா பாணியில் ஸ்டண்ட்’ அடிக்கும் ஆனந்தி..!

இன்று ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படம் வெளியாகியுள்ளது.. படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே இந்தப்படத்திற்கு இளைஞர்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது… ஆனால் படத்தில் கதாநாயகியாக நடித்த ‘கயல்’ ஆனந்தி இப்படி திடீரென ஸ்டண்ட் அடிப்பார் என்பதைத்தான் நம்மால் யூகிக்க முடியாமல் போய்விட்டது.

நய்யாண்டி படத்தில் நடித்தபோது நஸ்ரியா எப்படி தனது இடுப்பை காட்டி விட்டார்கள் என இயக்குனர் மீது போர்க்கொடி தூக்கி படத்தின் விளம்பரத்துக்காக ஸ்டண்ட் அடித்தாரோ, அதேபாணியில் கயல் ஆனந்தியும் இயக்குனர் எனனை ஏமாற்றிவிட்டார் என பகிரங்கமாக கூறியுள்ளார்..

அதாவது இயக்குனர் ஆதிக் தன்னிடம் முதலில் சொன்ன கதைப்படி காட்சிகளை படமாக்காமல், தன்னை டம்மியாக்கிவிட்டு, இன்னொரு ஹீரோயினான மனிஷாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டாராம். அதுமட்டுமல்ல, படத்தில் தனது கேரக்டரை மோசமாக சித்தரித்து, தனது இமேஜையும் டேமேஜ் பண்ணிவிட்டார் என புலம்பியிருக்கிறாராம்.

இதுவரை கூட ஆனந்தி சொல்வதில் ஏதோ விஷயம் இருக்கிறது.. நம்பலாம் என பார்த்தால், இந்த விஷயம் பற்றி படப்பிடிப்பின்போதே இயக்குனரிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறியுள்ளார். விஷயம் இங்கேதான் இடிக்கிறது.

அவர் திட்டிய விவகாரத்தை இவர் ஏன் முன்கூட்டியே தெரியப்படுத்தாமல், இன்று படம் ரிலீஸான தேதியில் வெளியிடுகிறார் என்பதற்கு காரணம் வேண்டாமா..? காரணம் இருக்கு சாமி.. இன்று வெளியாகியுள்ள ‘மாயா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, நல்ல ஒப்பனிங்கையும் தந்துள்ளது.

இதனால் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தின் வசூல் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவும், ரசிகர்கள் கூட்டத்தை தியேட்டரை நோக்கி இழுப்பதற்காகவும் படக்குழுவினரின் ஆலோசனைப்படி ஆனந்தி அடிக்கும் ஸ்டண்ட் தான் இது என்றும் சொல்கின்றனர்.. இப்போது எது உண்மையென உங்களுக்கே புரிந்திருக்கும்.