ராணா வாழ்த்து சொன்னார்.. வருண்மணியன் வாழ்த்து சொன்னாரா..?

த்ரிஷாவின் பிறந்தநாளில் அவருக்கு பலபக்கம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.. அதுமட்டுமல்ல ட்ரெண்டிங்கில் கூட டாப்பில் தான் இருந்தார் த்ரிஷா.. சமந்தா, டாப்ஸி, ஸ்ரேயா உட்பட பல சக போட்டி நடிகைகள் கூட வாழ்த்துக்களை சொல்லியிருந்தார்கள். விஷால், மாதவன், ஜெயம் ரவி என உடன் நடித்த நடிகர்களும் செல்வராகவன், திரு உள்ளிட்ட சில இயக்குனர்களும் கூட வாழ்த்து சொன்னார்கள்.

ஆனால் இதில் எல்லாம் ஆச்சர்யம் இல்லை.. த்ரிஷாவின் முன்னாள் காதலர் என்று சொல்லப்பட்ட ராணா டகுபதி வாழ்த்து சொன்னதுதான் ஹைலைட்.. இந்த வருடம் உனக்கு சிறப்பாக இருக்கும் என்று ராணா வாழ்த்து சொல்ல, அதற்கு த்ரிஷா என்ன பதில் சொல்லியிருக்கிறார் தெரியுமா.. ‘தேங்க்ய்ய்ய்யூ சைக்கோ’.

அதுசரி.. கொஞ்ச நாட்களாகவே த்ரிஷாவுக்கும், அவரது வருங்கால கணவரான வருண்மணியனுக்கும் கருத்து வேறுபாடு என்று செய்திகள் பரவும் நிலையில் அவரது வாழ்த்து எதுவும் டிவிட்டரில் இடம்பெறவில்லை. த்ரிஷா இப்போது வெளிநாட்டில் இருப்பதால் போனிலாவது வாழ்த்து சொன்னாரா என்றும் தெரியவில்லை. இல்லை வெளிநாட்டில் த்ரிஷா கூடவே சென்று பிறந்தநாளை கொண்டாடினாரா அதுவும் தெரியவில்லை.. இதுபற்றிய தகவல் எதையும் த்ரிஷா பகிர்ந்துகொள்ளவும் இல்லை. ஓகே.. உண்மை என்னவென்று விரைவில் தெரியத்தானே போகிறது.