த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு அவரது அம்மா தான் காரணமா..?

த்ரிஷா – வருண்மணியன் காதல் கதையையும் நிச்சயதார்த்தம் நடந்த கதையையும் இங்கே திரும்ப திரும்ப சொல்லவேண்டியது இல்லை. அதுதான் ஊரறிந்த விஷயம்.. ஆனா இப்ப த்ரிஷாவுக்கும் வருண்மணியனுக்கும் சண்ட.. அத ஊரே வேடிக்க பாக்குது என்று சொல்லும் அளவுக்கு கிட்டத்தட்ட த்ரிஷாவின் திருமணம் நின்றே போய்விட்டது.

கடந்த நான்காம் தேதி த்ரிஷா தன்னுடைய 33வது பிறந்த நாளைக் கொண்டாடினார். த்ரிஷாவுக்கு பலரும் வாழ்த்து கூறினார்கள். அட.. அவரது முன்னாள் காதலர் நடிகர் ராணா கூட வாழ்த்து சொன்னார். ஆனால் வாழ்த்து சொல்லவேண்டிய வருங்கால கணவர் வருண்மணியன் வாழ்த்து சொல்லவேயில்லை. இதன் மூலம் அவர்கள் இருவருக்குமான பிரிவு கிட்டத்தட்ட உண்மையாகியுள்ளது.

இந்த விஷயம் பற்றி த்ரிஷாவோ, வருண் மணியனோ இதுவரை வாய் திறக்கவேயில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரையும் விட்டுவிட்டு த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் முந்திக்கொண்டு விளக்கம் கொடுத்துள்ளார். அதையும் தான் கொஞ்சம் படிச்சு பாருங்களேன்..

“த்ரிஷா திருமணம் நின்று போனது பற்றி நிறைய தவறான செய்திகள். வெளிவருகின்றன. ஆனால் அது எதுவுமே உண்மையில்லை. த்ரிஷாவுக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வருகிறது. திருமணத்திற்கு பிறகும் த்ரிஷா நடிக்கலாம் என்று வருண்மணியன் கூறினார். அதை அவர்களது பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள், நிச்சயமும் நடந்தது. ஆனால் இப்போது குடும்பத்தில் சில பெரியவர்கள் திருமணம் நின்று போக காரணமாகியுள்ளனர். அதை வெளிப்படையாக பேச முடியாது, த்ரிஷா இப்போதைக்கு தன் சினிமாவில் கவனத்தை செலுத்தியுள்ளார்” இதுதான் த்ரிஷாவின் அன்புத்தாய் கூறியுள்ள விளக்கம்.

இதை படிக்கும் சாதாரண மனிதனுக்கு கூட சில விஷயங்கள் தெளிவாக புரியும்.. அவரது தாய் கூறியுள்ளபடி பார்த்தால் த்ரிஷாவுக்கு நடிப்பை நிறுத்தும் எண்ணம் இருக்கிறதோ இல்லையோ, அவரது அம்மாவுக்கு த்ரிஷா நடிப்பதையும், கோடிகளில் சம்பாதிப்பதையும் நிறுத்துவதில் உடன்பாடில்லை.

அடுத்ததாக புதிய படங்களை வேண்டுமென்றே ஒப்புக்கொள்ள வைத்ததன் மூலம் த்ரிஷா – வருண்மணியனுக்கு இடையேயான இடைவெளியை அதிகப்படுத்தியவர் அவர் தாய் தான். ஒரு உண்மையான அம்மாவாக தனது மகள் திருமணம் நடக்கவேண்டும் என நினைத்திருந்தால் அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல், இருக்கும் படங்களை முடித்துக்கொடுக்க சொல்லிவிட்டு, உடனே மகளின் கல்யாண வேளைகளில் இறங்கியிருப்பார்.

தொடர்ந்து 15 வருடமாக த்ரிஷா நடித்து வருகிறார். அவரது சம்பாத்தியம் முழுவதும் கோடிகளில் பணமாகவும் சொத்துக்களாகவும் இருக்கும். த்ரிஷாவின் தந்தையும் இறந்துவிட்டார். த்ரிஷாவும் ஒரே மகள் தான். அப்படி இருக்கையில் இனி மேலும் மேலும் நடித்து தனது வாழ்க்கைக்கு பணம் சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் த்ரிஷாவுக்கு இல்லையே. தவிர திருமணம் செய்துகொள்ளப்போகிற வருண்மணியனும் கோடீஸ்வரர் தானே..?

மீனா, ஜோதிகா, போல திருமணம் செய்து செட்டிலாகிவிட்டு சில நாட்கள் கழித்து கூட த்ரிஷா நடிக்க வரலாமே.. அதனால் ஒன்றும் குடிமுழுகி போய்விடப்போவதில்லையே.. நல்லதோ கெட்டதோ, நடிகை தேவயானி கூட, தான் பீக்கில் இருந்த சமயத்தில் தனது அன்னையை எதிர்த்து சுவரேறி குதித்து தன்னைவிட வசதி குறைந்த ராஜகுமாரனை திருமணம் செய்துகொள்ளவில்லையா..? இன்று நல்லதொரு குடும்பத்துடன் வாழும் அவர் நடிக்காமல் இல்லையா..?

பொதுவாக நடிகைகளை விட அவர்களது பாடிகார்டாக சினிமாவுக்குள் அதிகாரம் பண்ணி பழகிவிட்டதால் நடிகைகளின் அம்மாக்களுக்குத்தான் சினிமாவை விட்டு விலகுவது ரொம்ப கஷ்டமாக இருக்கும்.. த்ரிஷாவின் அம்மா கடைசியாக சொன்ன, “த்ரிஷா இப்போதைக்கு தன் சினிமாவில் கவனத்தை செலுத்தியுள்ளார்” என்கிற வாசகமே அவரது அம்மாவின் திட்டத்தை பறைசாற்றுவதாகத்தான் இருக்கிறது.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால் த்ரிஷாவின் அம்மாவை பார்ப்பவர்கள் அவருக்கு அக்காபோல இருப்பதாகத்தான் சொல்வது வழக்கம்.. காரணம் த்ரிஷாவின் அம்மா இளம் வயதிலேயே… நன்றாக கவனியுங்கள்.. திருமணம் செய்துகொள்ளவேண்டிய சரியான வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர்.. கிட்டத்தட்ட 2௦ வயதுக்குள்.

தான் மட்டும் உரிய காலத்தில் இல்லற வாழ்க்கையை அனுபவித்துவிட்டு தனது மகள் மட்டும் முதிர்கன்னியாகவே காலம் தள்ளட்டும் என நினைப்பது ஒரு தாய் செய்யக்கூடாத பாவம்.. அதைத்தான் த்ரிஷாவின் அம்மா இப்போது செய்கிறாரோ என்பதுதான் அவரைப்பற்றி நன்கு அறிந்த த்ரிஷா நட்பு வட்டாரத்தின் சந்தேகம்.. த்ரிஷாவுக்கு இதை யார் சொல்லி புரிய வைக்கப்போகிறார்கள்..? இதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்..