“இத முன்னாடியே பண்ணிருக்கலாம்ல” – முணுமுணுக்கும் மூணுஷாவின் நட்பு வட்டாரம்..!

என்ன வேகத்தில் காதலில் விழுந்தாரோ, என்ன வேகத்தில் நிச்சயதார்த்த விழாவை நடத்தினாரோ அதே வேகத்தில் கல்யாணம் நடக்காது என்றும் அறிவித்த மூணுஷா நடிகை, தற்போது இப்படி ஒரு சம்பவம் தனது வாழ்க்கையில் நடந்த சுவடே இல்லாமல் ஹாயாக உலா வருகிறார்.

அதன்பின் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினாலும் எழுப்பாவிட்டாலும் அவராகவே டிவிட்டரில் அவ்வப்போது, “திருமணம் செய்துகொண்டுதான் வாழவேண்டும் என சட்டமா என்ன?, தனியாக ஒரு பெண்ணால் வாழ முடியாதா” என வியாக்யானம் எல்லாம் பேசி வந்தார். இப்போதும் பேசி வருகிறார்.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது தெரியுமா..? தான் ஏற்கனவே காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பாகுபலி வில்லனுடன் (அட.. காளேகேயன் இல்லைங்க) மீண்டும் தனது நட்பை புதுப்பித்து பழையபடி ஊர்சுற்ற ஆரம்பித்துவிட்டாராம். ஆந்திராவில் சமீபத்தில் இப்டி வெளிப்படையாக ஜோடிபோட்டு சுற்றின இந்த ஜோடிதான், கடந்த இரண்டு மூன்று நாட்களாக டோலிவுட் சினிமாவின் ஹாட் டாபிக்காக இருக்கிறதாம்.

இந்த அம்மணி, தயாரிப்பாளருடன் லவ்’வென்று சொல்லிக்கொண்டு சுற்றியபோது கூடவே சுற்றிக்கொண்டிருந்ததே மூணுஷாவின் அல்லக்கை நட்பு வட்டாரமோ, “இப்படி சுத்துற மூணுஷா, அப்புறம் எதுக்கு நிச்சயதார்த்தம், கல்யாணம்னு ட்ராமா போடணும்.. இப்ப அதெல்லாம் ஜுஜுபி மேட்டர்ங்கிற மாதிரி பழைய ஆளு கூடவே ஏன் சுத்தணும்.. அதுக்கு பேசாம இந்த பாகுபலி வில்லனையே கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகலாமே” என தங்களுக்குள் பேசி வருகிறார்களாம். அதுமட்டுமல்ல, மூணுஷா அடிக்கும் கூத்துகளுக்கு தாங்கள் ஏன் தேவையில்லாமல் சாட்சியாக நிற்கவேண்டும் என பெசிக்கொண்டதாகவும் கேள்வி.