வேதாளம் பட காட்சிகள் வெளியானதற்கு யார் காரணம்…?

தீபாவளிக்கு வெளியாகப்போகும் வேதாளம் படத்திற்கு இன்னும் ற்றேய்லரே வெளியாகவில்லை.. ஆனால் மெயின் பிக்சர் என சில வினாடியாகுள் ஓடும் பட காட்சிகள் துண்டு துண்டாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த வீடியோக்கள் திரையரங்குகளில் படம் ஒடும்போது மொபைலில் எடுத்திருப்பது தெளிவாக தெரிகிறதாம்..

படமே ரிலீசாகாத நிலையில் எப்படி தியேட்டரில் இந்த காட்சிகளை எடுக்கமுடியும் என படக்குழுவினர் குழம்பிய நிலையில் இப்போது அதற்கான உண்மை தெரியவந்துள்ளதாம். கடந்த சில நாட்களாக விஐபிக்களுக்கு வேதாளம் படத்தை போட்டுக்காட்டுவதில் பிஸியாக இருந்தாராம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

குறிப்பாக வரிவிலக்கு பெரும் முயற்சியாக, அந்த குழுவில் இடம்பெற்றுள்ள இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரின் ஏற்பாட்டில் நேற்று தமிழக அமைச்சர்கள் சிலரது குடும்பத்தினருக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டதாம். அதில் படம் பார்க்க வந்த இளசுகள் கூட்டம்தான் இதை செல்போனில் படம்பிடித்து தங்களது நண்பர்கள் வட்டாரத்தில் படம் பார்த்துவிட்டதாக கூறி ‘கெத்து’ காட்ட முயற்சித்திருக்கலாம் என்றும், அதன்மூலம் இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது..