“எவன்டா இந்த வேலைய பண்ணியது..?” – கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள்..!

மிர்ச்சி சிவாவின் தோளில் விஜய் கைபோட்டபடி நின்றிருக்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் பயங்கர வேகத்தில் ஷேர் ஆகிவருகிறது. இந்தப்புகைப்படம் ஆறுமாதத்திற்கு முன்பு பிரேம்ஜியின் பிறந்தநாள் பார்ட்டியில் விஜய் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்..

இந்தப்புகைப்படம் தான் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதோடு, விஜய் ரசிகர்கள் அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. காரணம் இந்த புகைப்படத்தில் விஜய் போதையுடன் இருப்பது போலவும் அதனால் சிவாவின் தோளில் கைபோட்டு சமாளித்தபடி நிற்பது போலவும் இருப்பதாக ரசிகர்கள் நினைக்கிறார்களாம்.

உண்மையில் அப்படி இல்லாமல் போட்டோ எடுக்கும் பொது பாதியளவு கண்களை மூடி இருக்கலாம். ஆனால் விஜய்க்கு எதிரானவர்கள் அவரது ‘புலி’ வெளியாக இருக்கும் நேரத்தில் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று வேண்டுமென்றே இந்த புகைப்படத்தை இத்தனை நாள் கழித்து பரப்பிவருகிறார்கள் என விஜய் ரசிகர்கள் நினைக்கிறார்களாம்.

அதனால் ‘எவன்டா இந்த வேலையை பார்த்தது என இணையதள அறிவு ஜீவுகளின் உதவியோடு இந்தப்படத்தை முதலில் ஷேர் செய்தது யாராக இருக்கும் என தேடி வருகிறார்களாம்.