செல்போன தொட்ட…. நீ கெட்ட.. ; பிக் பாஸ் நடிகையின் கதியை பாருங்கள்..!


தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர் காஜல் பசுபதி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஓரளவு அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.. ஆனால் ஏனோ தெரியவில்லை, அவர் சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். மேலும் இறுதியாக ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை காஜல் பசுபதியை பொறுத்தவரை சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கக்கூடியவர். ஆனால், கடந்த சில காலமாக சமூக வலைதளத்தில் எந்தவித பதிவையும் வெளியிடாமல் இருந்து வந்துள்ளார். அதற்கு காரணம் என்னவென்று இப்போது காஜல் மூலமாகவே உண்மை வெளிப்பட்டுள்ளது.

அதாவது செல்போனில் அதிகம் கேம் விளையாடியதால், கொஞ்சம் கண் பார்வையையும் இழந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல் பசுபதி. அதனால் தற்போது டாக்டர்களின் அறிவுரைப்படி சிறிது காலத்திற்கு இவர் செல்போனை அதிகம் பயன்படுத்தக்கூடாதாம். செல்போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு காஜல் பசுபதியின் நிலைமை ஒரு எச்சரிக்கை தான்.