முத்தம் கொடுத்தது யாருக்கு’..? ; அமலாபால் விளக்கம்..!


விவாகரத்துக்கு விண்ணப்பித்த பின்னர் தான் அமலாபால் தனது முழு சுதந்திரத்தையும் கொண்டாடுகிறார் என்றே தோன்றுகிறது.. ஆனால் அவரை திருமணமான பெண்ணாக பார்த்து பழகிவிட்ட ரசிகர்களுக்கு அவர் சுதந்திரமாக தன்னிச்சையாக செய்யும் பல செயல்கள் வெறுப்பையும் கோபத்தையுமே ஏற்படுத்துகின்றன என்பதை சோஷியல் மீடியாவில் அவ்வபோது பார்க்க முடிகிறது..

அந்தவிதத்தில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படம் மிகுந்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து வழக்கம்போல் சிலரிடம் இருந்து மோசமான கமெண்ட்டுகள் வர, ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், தற்போது வேறுவழியின்றி இறங்கிவந்து விளக்கம் அளித்துள்ளார் அமலாபால்.

அது தன்னுடைய நீண்ட நாள் நண்பர் அஜித் என்றும், பழைய நண்பர்கள் ஒன்றாக சந்தித்தபோது எடுத்த போட்டோ என்றும், அந்த அஜித்திற்கு திருமணம் என்பதால் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் விதமாக அந்த போட்டோவை பதிவிட்டு திருமண வாழ்த்துக்கள் சொன்னதாகவும் விளக்கம் அளித்துள்ளார் அமலாபால்.

போட்டோவை கவனித்த நபர்கள், அதற்கு கீழே அவருக்கு அமலாபால் கல்யாண வாழ்த்து சொன்னதை கவனிக்காமல் விட்டதை என்னவென்று சொல்வது..?