ஹன்சிகா இப்படி செய்யலாமா..?


கடந்த ஒரு வருடத்திற்கு முன்புவரை பிசியாக நடித்து வந்தவர் தான் ஹன்சிகா. ஆனால் இந்த வருடம் அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை தற்போது மஹா என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் அதனால் தன்னை விளம்பரப்படுத்தும் நோக்கில், தான் நடித்து வரும் ‘மஹா’ படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை வெளியிடும்படி தயாரிப்பு நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்து அதன்படி அந்த போஸ்டர்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி ஹன்சிகாவிற்கு மீண்டும் ஒரு பப்ளிசிட்டி வெளிச்சத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான துப்பாக்கி முனை படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ஹன்சிகா, அந்த படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் அந்த சமயத்தில் பயண செலவு, தங்கும் வசதி போன்றவற்றுடன் காஸ்ட்யூம் செலவுக்காக என ஒன்றரை லட்ச ரூபாய் தயாரிப்பாளரிடம் கேட்டு வாங்கி விட்டாராம்.

இதில் என்ன காமெடி என்றால் மும்பையில் ஹன்சிகா சொந்தமாகவே துணிக்கடை வைத்துள்ளார் தன்னுடைய படங்களுக்கு காஸ்ட்யூம்ஸ் என்கிற பெயரில் அங்கேயே எடுத்துக்கொண்டு அந்த பில்லையும் தயாரிப்பாளர் தலையில் கட்டிவிட்டாராம். வாய்ப்பே இல்லாமல் இருக்கும் ஹன்ஷிகா, ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்த இடத்தில் இப்படி தயாரிப்பு செலவை இழுத்துவிட்டது சரினதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது