தேவையில்லாமல் ஏன் சிக்கலில் மாட்டுகிறார் விஷ்ணு..!


சமீபகாலமாகவே நமது தமிழ் சினிமாவில் சில படக்குழுவினர் பப்ளிசிட்டிக்காவே பிரச்சனைகளை வான்டட் ஆக இழுக்கிறார்களோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. வருவது பின்னால் வரட்டும்.. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்கிற விட்டேத்தியான போக்கு நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

சமீபத்தில் விஷ்ணு நடிப்பில் உருவாகிவரும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.. அதில் விஷ்ணு காலில் அணிந்துள்ள செருப்பில் இங்கிலாந்து நாட்டு கொடியின் வண்ணம் அச்சு பதிக்கப்பட்டுள்ளது.

தார்மீக முறைப்படியும், சட்டப்படியும் எந்த நாட்டுக்கொடிகளையும் இழிவுபடுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது தெரிந்தும் எப்படி இதுபோன்ற செயல்களை நடிகர்களும் இயக்குனர்களும் அனுமதிக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.. நம் நாட்டு கொடியை மற்றவர்கள் இழிவுபடுத்தினால் நமக்கு எப்படி கோபம் வருமோ, அதேபோல மற்ற நாட்டு கொடிகளை நாமும் மதிக்கவேண்டும் என்பதயும் புரிந்துகொள்ள வேண்டும்.