“நீ அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லப்பா” ; மகனுக்கு தந்தை உபதேசம்..!


தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்க என்றைக்குமே தயங்கமாட்டார் சிம்பு… சினிமா விபரங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். அந்தவகையில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் தனது ‘இது நம்ம ஆளு’ படத்தை வரும் ஏப்-14 அன்று ரிலீஸ் பண்ணுவதற்கான வேலைகளில் இறங்கினாராம் சிம்பு.. ஆனால் அன்றுதான் விஜய்யின் ‘தெறி’ படமும் வெளியாகிறது..

விஜய் படத்துடன் மோதினால் சேதாராம் விஜய்க்கால்ல.. நிச்சயம் சிம்புவுக்குத்தான்.. ஏற்கனவே துப்பாக்கி ரிலீஸானபோது தான் நடித்த ‘போடா போடி’ படத்தை ரிலீஸ் செய்து சூடுபட்ட அனுபவம் சிம்புவுக்கு உண்டு. இத்தனைக்கும் அது நல்ல படமாக இருந்தும் கூட விஜய்யுடன் தமுடியாமல் சுணங்கியது..

இதையெல்லாம் சுட்டிக்காட்டிய டி.ஆர் விஜய்யுடன் மோதுவது தேவையில்லாதது என்றும், ‘வாலு’ படத்திற்கு அவர் உதவி பண்ணவில்லை என்றால் அந்த படமே வெளிவந்திருக்காது என்றும் தற்போது விஜய்யுடன் தான் நல்ல நல்ல நட்பில் இருந்துவருவதால் தயவுசெய்து அதை கெடுத்துவிடாதே என்றும் சிம்புவுக்கு உபதேசித்தாராம்.

கடைசியாக “விஜய்யுடன் மோதும் அளவுக்கு நீ ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடாக்கர் இல்லை” என்று முக்கியமான வார்த்தைகளில் அடித்து அவரை மறுபேச்சு பேசவிடாமல் அமரவைத்துவிட்டாராம். பின்னே படம் தயாரிப்பதற்கு அவரல்லவா காசை அள்ளி இறைத்திருக்கிறார்.. அதனால் சிம்பு படம் வரும் ஏப்-14 அன்று வெளிவர வாய்ப்பில்லை என்றுதான் சொல்லப்படுகிறது.