பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவி!

“சிங்கம் போலபறந்து வரான் செல்லப் பேராண்டி” போன்ற பாடல்கள் மூலம் தன் கம்பீரக் குரலால் ரசிகர்களைக் கவந்தவர் பரவைமுனியம்மா.சில படங்களிலும் நடித்தார். இவரது புகழ் பல எல்லைகளைத் தாண்டினாலும் இவரால் வறுமைக் கோட்டை தாண்ட முடியவில்லை.

மனநலம் குன்றிய ஒரு மகன் உள்பட இருமகன்கள்அவருக்கு. குடும்பத்தில் பெரிதாக வருமானமில்லை சிரமப்படுவதாகக் குமுதம் பத்திரிகையில் பேட்டியில் கூறியிருந்தார் இதைப் படித்த நடிகர் விஷால் உடனடியாக உதவ முன்வந்திருக்கிறார் கோவை மதுரை சுற்றுப் பயணத்திலிருந்த விஷால் நேரடியாக பரவை முனியம்மாவை அவரது ஊரில் சந்தித்தார். நேரில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்ததுடன் இனி மாதாமாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்கி உதவுவதாக உறுதியளித்ததுடன் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று வந்திருக்கிறார்.இருட்டு என்று கதறுவதைவிட ஒரு மெழுகு வர்த்தி ஏற்றிடும் கை உயர்வானது.

விஷால் மனதளவிலும் உயரமானவர்தான்.