தமிழ் சினிமாவில் அமெரிக்க வாழ் தமிழ் பாடகர்..!

தமிழ் சினிமாவில் பாட்டு பாடுவதற்குப் ஆந்திரா, கேரளா, வடக்கே மும்பையிலிருந்தெல்லாம் வந்து பாடிப் பல பாடகர்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இப்போது அமெரிக்காவிலிருந்து பாடகர் ஒருவர் வந்து இங்கே பாடியுள்ளார். அவர் பெயர் நாராயணன் மோகன். ‘அய்யனார்வீதி’ ,’தொண்டியான்’ படங்களில் பாடியுள்ளார். அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

இந்நிகழ்வில் இயக்குனர் ஜிப்ஸிராஜ்குமார் நாராயணன் மோகனை அறிமுகப்படுத்திப் பேசினார். அவர் பேசும் போது.

” சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதியார் பாடினார். அப்படி ஒரு கலைச் செல்வமாக வந்திருப்பவர்தான் நாராயணன் மோகன். இவர் அமெரிக்காவிலிருந்து இங்கே பாட வந்து இருக்கிறார். நான் இயக்கியுள்ள ‘அய்யனார்வீதி’ படத்தில் யு.கே.முரளி இசையில் ஒருபாடல் பாடியிருக்கிறார் . அவரது இசையார்வம் சாதாரணமானதல்ல. சமீபத்தில் காமராஜர் அரங்கத்தில் ஒரு இசைநிகழ்ச்சி நடத்தினார் .பார்த்து வியந்தேன். சாதனைகளுக்கு வயது ஒரு தடையில்லை என்று கலாம் சொன்னதற்கு உதாரணமாக இருந்து வருகிறார். இவர் ஒரு பாடகராக வெற்றி பெற்று உலகம் முழுக்க வலம் வருவார் ” என்றார்.

‘தொண்டியான்’ படத்தின் இயக்குநரும் , நாயகனுமான அரசு பேசும் போது,

” நான் ‘தொண்டியான்’படத்தில் வெற்றுடம்புடன் 350 டியூப் லைட்டுகளை உடைத்திருக்கிறேன். வெற்றுடம்புடன் சரவெடிகளை உடம்பில் வெடிக்க வைத்திருக்கிறேன். நெருப்பு உடம்பில் எரிவது போல் நடித்திருக்கிறேன். எங்கள் படத்தில் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் நாராயணன் மோகன் அம்மா பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். அந்த பாடல் படத்துக்குப் பெரிய பலமாக இருக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் யு.கே. முரளி பேசும்போது,

” நாராயணன் மோகன் நல்ல திறமைசாலி .இசையில் அவருக்கு பெரிய ஆர்வம் ,ஈடுபாடு உண்டு. .எங்கள் படங்களில் மட்டுமல்ல இசையமைப்பாளர்கள் அம்பிரிஷ் ,ரெஹானா இசையிலும் பாடியிருக்கிறார். தன் மானசீக குருவாக சங்கர் மகாதேவனை மதிப்பவர்; பின்பற்றுபவர். இசையில் கடினமாக ஐந்து மணிநேரம் கூட பயிற்சி செய்பவர். அவர் சிறந்த பாடகராக வர வாழ்த்துகிறேன் ”என்றார்.

இசையமைப்பாளர் ரெஹானா பேசும் போது,

” அண்மையில் நாராயணன் மோகன் நடத்திய கச்சேரியை நான் பார்த்து வியந்தேன். அதில் நானும் பாடினேன். என்னையும் பங்குபெறச் செய்ததில் மகிழ்ச்சி . அவரது மனைவி இறைவனின் வரம் .அவர் கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்.அவர் சிறந்த பாடகராக வர வாழ்த்துகள்’.”என்றார்.

திருமதி நாராயணன் மோகன் பேசும்போது ,
” எனக்கு ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் எல்லா பாடல்களும் பிடிக்கும். அவரது சகோதரி இங்கு வந்து இருப்பதை நாங்கள் ஆசீர் வதிக்கப் பட்டதாக உணர்கிறேன்.ஏ.ஆர்.ரகுமான் அவர்களே இங்கு இருப்பதாகவும் உணர்கிறேன். வெளிநாட்டிலிருந்து சாதிக்கும் வெறியோடு வந்திருக்கிற எங்களை ஆதரித்து ஊக்கப் படுத்துங்கள்.”என்றார்.

பாடகர் நாராயணன் மோகன் பேசும்போது,

” நாங்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கிறோம். 1980ல் போய் 35 ஆண்டுகளாக அங்கே வசிக்கிறோம். நான் அங்கே ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறேன். அதில் எனக்குக் கீழ் 250 பேர் வேலை பார்க்கிறார்கள். பகலில் அலுவலகப் பணி முடிந்து மாலை வீடு வருவேன். மாலை7 மணிமுதல் இரவு10 மணி வரை பாடிக் கொண்டே இருப்பேன்.இசைப் பயிற்சி செய்துகொண்டே இருப்பேன். சிலநேரம் இரவு முழுதும் பாடி காலை சூரியனின் வெயில் முகத்தில் அடித்தால்தான் நிறுத்துவேன். அவ்வளவு ஆர்வம் எனக்கு.

அமெரிக்காவில் நிறைய இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன் யு.கே.முரளியைச் சந்தித்த போது இங்கே வர நினைத்தேன்.அதன் படி சென்னையில் அண்மையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். என்னுடன் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களும் பாடியது எனக்குப் பெருமை. என் மானசீக குருவாக சங்கர் மகாதேவனை நினைப்பவன் ;மதிப்பவன். நான் இப்போது நாலைந்து படங்களில் பாடியிருக்கிறேன்.புதிய வாய்ப்புகளும் வந்துள்ளன. ‘தொண்டியான்’ படத்தில் நான் பாடிய அம்மா பாட்டு பிரபலமாகும் என்று நம்புகிறேன்..” என்றார்.

நிகழ்வில் ‘தொண்டியான்’ படத்தின் தயாரிப்பாளர் திருமதி சக்தியம்மா பேசும் போது,
” கலைக்கு மொழி இல்லை.சாதி மத வேறுபாடுமில்லைஎன்ற அடிப்படையில் ‘தொண்டியான்’ படம் உருவாகியுள்ளது. பாடகர் நாராயணமோகன் சிறந்த பாடகராக வர வாழ்த்துகிறேன்” என்றார்.
முடிவில் பிஆர்ஓ செல்வரகு நன்றி கூறினார்.