உதவி இயக்குனருடன் தனிக்குடித்தனம் நடத்தும் இயக்குனரின் வாரிசு..!

தந்தை தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர் கம் நடிகர்.. தாயும் பிரபலமான நடிகை தான். அதற்கேற்ற மாதிரி தங்களது மகனையும் மகளையும் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சி செய்தார் இயக்குனர். ஆனால் மகனுக்கு நட்சத்திர கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு வருகிறதே தவிர நடிப்பு வரவில்லை.. பட வாய்ப்பும் வரவேயில்லை.

சரி மகளையாவது நடிக்கவைக்கலாம் என மலையாள நடிகருக்கு ஜோடியாக்கி பூவின் பெயரில் படம் எடுத்தார் தந்தை. ஆனால் அந்த பூ பூத்த உடனேயே வாடிவிட்டது. அதன்பின்னர் தனது அம்மாவுடன் முதல் படத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமாகி இன்றைய மலையாள சூப்பர்ஸ்டாராக இருப்பவருக்கு ஜோடியாக ஒரு மலையாளப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவர, அதில் நடித்தார் மகள்..

அதன்பின் அக்கா புருஷன் மீது ஆசைப்படும் கொழுந்தியா பற்றி படம் எடுத்த இயக்குனரின் திகில் படம் ஒன்றில் நடித்தார். படம் வெளிவந்ததா இல்லையா என்பதே இன்னும் மர்மமாகத்தான் இருக்கிறது. சரி மெயின் விஷயத்திற்கு வருவோம்.. இப்போது மகள் தனது குடும்பத்தினருடன் வசிக்காமல் ஒரு உதவி இயக்குனருடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறாராம்.

தாயும் தந்தையும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் மகள் கேட்பதாக இல்லை.. வீட்டிற்கு வருவதாகவும் இல்லை. அதனால் பல விழாக்களில் மகள் இல்லாமல் கலந்துகொள்ளும்போது எங்கே உங்கள் மகள் வரவில்லையா என பலர் கேட்டாலும், வீடு தேடி வருபவர்கள் இதே கேள்வியை கேட்டாலும் மகள் படிப்பதற்காக வெளிநாட்டு போயிருக்கிறார் என்று சொல்லி சமாளித்து வருகிறார்களாம் இந்த நட்சத்திர தம்பதி. மகளுக்கும் திருமண வயசு ஆகிவிட்டதால் பேசாமல் அந்த உதவி இயக்குனருக்கே கல்யாணம் செய்துவைத்து பிரச்சனையை சால்வ் பண்ணிவிடலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம்.