சிம்புவால் நடுத்தெருவுக்கு வந்த இயக்குனருக்கு மீண்டும் கைகொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்..!


‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்ததாக சிம்புவை வைத்து அன்பனாவன், அசராதவன், அடங்காதவன் என்கிற படத்தை இயக்கி அந்தப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுடன் சேர்ந்து இவரும் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.

தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷே இவருக்கு கைகொடுத்துள்ளார். ஆம். தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷூடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதைப்படி இரண்டாம் பாதியில் 3டி தொழில்நுட்பம் தேவைப்படுவதால் முதல் பாதி 2டியிலும், இரண்டாம் பாதி 3டியிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முதன்முதலில் புகுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை படம் வெளியானவுடன் பார்க்கலாம்.