“என் கூட நடந்து வராதே” – ஸ்ருதியை ஒதுக்கிய கமல்..!

இந்தியில் ஸ்ருதிஹாசன் நடித்த ‘கப்பார் இஸ் பேக்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப்படத்தின் புரமோஷனல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மும்பையில் உள்ள பைவ்ஸ்டார் ஹோட்டல் ஒன்றிற்கு ஸ்ருதிஹாசன், படத்தின் நாயகன் அக்சய் குமார் ஆகியோர் சென்றார்களாம்.

அப்போது கேஷுவலாக பேசிக்கொண்டிருக்கும்போது அக்சய் குமார், ஸ்ருதிஹாசனிடம் ஆமாம் நீ ஏன் எப்போதும் உயரமான ஹாய் ஹீல்ஸ் செருப்பை அணிந்து சிரமப்படுகிறாய்.. உன்னை உயரமாக காட்டுவதற்காகவா என கேட்டுள்ளார்.. அதற்கு ஸ்ருதிஹாசன் நான் ஏற்கனவே உயரமானவள் தான்.. என் உயரம் 5 அடி 7 அங்குலம்.. என பதில் சொல்லியிருக்கிறார்.. அக்சய் மட்டுமல்ல, பல பேர் ஸ்ருதியுடன் இணைந்தவாறு நடந்து வரும்போது, அவரின் உயரம் மற்றவர்களை சங்கப்படுத்தவே செய்கிறதாம்.

இந்த தர்மசங்கடம் ஸ்ருதியின் தந்தையான கமலுக்கே பலமுறை ஏற்பட்டிருக்கிறதாம். “அப்பாவுடன் சேர்ந்து நடக்கும்போது அவரைவிட நான் உயரமாக இருப்பதால் அப்பாவே சங்கடப்படுவார்.. அந்தமாதிரி சமயங்களில் சில நேரம் என்னைபபார்த்து நீ கொஞ்சம் தள்ளி நடந்து வா.. என் கூட நடந்து வராதே என்று கூட சொல்லியிருக்கிறார்” என தனது உயரம் குறித்து பெருமைப்பட்டுக்கொள்கிறார் ஸ்ருதிஹாசன்.