‘ அஜித்’க்கு செக் வைத்த நடிகர் சங்கம்..!


தமிழ் நடிகர்களில் மற்றவர்கள் ஒரு ரகம் என்றால் ‘அஜித்’ மட்டும் தனி ரகம்.. எளிமையாக இருப்பதாகவும் எல்லோருக்கும் யாரும் அறியாமல் (!?) உதவி செய்வதாகவும் அவரது ரசிகர்கள் அவரை ‘தலை’க்கு மேல் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.. ஆனால் மனிதரோ படப்பிடிப்பு, டப்பிங் பேசுவதோடு தன் வேலை முடிந்துவிட்டது என பேட்டாவை வாங்கிக்கொண்டு ஒதுங்கி விடுகிறார்..

தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீடு, மற்றும் திரையுலகில் நடைபெறும் துக்க நிகழ்வுகள் என எதிலும் ‘அஜித்’ காட்ட விரும்பமாட்டார். ஆனால் வரும் 20ஆம் தேதி முதன்முதலாக நடிகர் சங்க பொதுக்குழு கூட இருக்கிறது. இதில் அனைத்து நடிகர்களும் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டு, அவர்கள் வருவதற்கு வசதியாக அனைத்து படப்பிடிப்புகளுக்கும் அன்றைய தினம் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது..

சங்கத்தில் உறுப்பினராக இருந்தாலும் கடந்த வருடம் நடைபெற்ற நடிகர்சங்க தேர்தலில் ஓட்டுப்போட வராமல் டிமிக்கி கொடுத்த ‘அஜித்’, இந்த பொதுக்குழு கூட்டத்திற்காகவது வருவாரா..? இல்லை டிமிக்கி கொடுப்பாரா.. இன்னும் மூன்று நாள் வெயிட் பண்ணுங்க.. தெரிந்துவிடும்.