சிவகார்த்திகேயன் தயாரிப்பாளரானதன் பின்னணியில் விஜய் டிவி அதிகாரி இருக்கிறாரா.?

தனக்கு மேனேஜர் என யாரும் இல்லை என்றும் தனக்கு வரும் போன் கால்களை தானே தான் அட்டென்ட் செய்கிறேன் என்றும் தனது பட விவகாரங்களை தானே பார்த்துக்கொள்கிறேன் என்றும் ஒரு விழாவில் பேசியபோது க்ளியர் கட்டாக தெரிவித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

ஆனால் இப்போது சிவகார்த்திகேயன், அவரது நண்பரும் மேனேஜர் என்று சொல்லப்படுபவருமான ராஜா என்பவருடன் இணைந்துதான் ‘சிவகார்த்திகேயன் பிக்சர்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தின் முதல் படத்தை அட்லியிடம் அசோஸியேட்டாக வேலை பார்த்த பாக்கியராஜ் பாரதி என்பவர் இயக்குகிறார். படத்திற்கு ‘பாதாம் பிஸ்தா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

சரி..சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தொடங்க காரணம் என்ன..?. அதன் பின்னணியில் இருந்து செயல்படுபவர்கள் யார் தெரியுமா..? அதற்குமுன் சிறு விளக்கம்.. சிவகார்த்திகேயனுக்கு இப்போது ஒரு படத்திற்கு ஐந்து கோடி வரை சம்பளம் தருகிறார்கள். ஆனால் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு குறைந்த பட்சமாக வைத்தாலும், கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கிறதாம்.

அதற்கு பதிலாக பேசாமல் நாமே தயாரித்துவிட்டால் தயாரிப்பாளருக்கு செல்லும் லாபத்தை தனது பக்கமாக திருப்பி விடலாமே என்பது தான் சிவகார்த்திகேயனின் மெகா பிளான். இதன் பின்னணியில் விஜய் டிவியின் செயல் அதிகாரி ஒருவர் இருந்து செயல்படுவதாக சொல்லப்படுகிறது.. இவர்தான் சிவகார்த்திகேயன் சம்பள விவகாரங்களை கவனித்து வந்தாராம்.

அதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயன் படங்களை நல்ல விலைக்கு விஜய் டிவிக்கு வாங்கிப்போடுவதிலும் இவரது கை தான் ஓங்கியுள்ளது.. எப்படியும் தனுஷ் தரப்பு சிவகார்த்திகேயனை கழட்டிவிட்டு டம்மியாக்க முயற்சிக்கும் என்பதால், சேப்டிக்காக இவரே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க சொல்லி சிவகார்த்திகேயனை தூண்டிவிட்டுள்ளார்.

அப்படி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தின் அசலை விட விஜய் டிவியில் அதிக விலைக்கு வாங்கி அதிலேயே லாபம் பார்த்துவிடலாம் என்றும், தியேட்டர் மற்றும் பிற பிரிவுகளில் இருந்து வரும் வருமானம் என எதையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளிவிடலாம் என்றும் இந்த அதிகாரி கொடுத்த ஊக்கத்தில் தான் சிவகார்த்திகேயன் காய்களை நகர்த்தி வருகிறாராம். தங்கள் டிவியின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயனை எப்படியாவது டாப் ரேங்கிற்கு கொண்டுவந்துவிட வேண்டும் என விஜய் டிவியும் இந்த அதிகாரியும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாக சொல்லப்படுகிறது.