மா.கா.பா.ஆனந்துக்கு சைகையால் உத்தரவிட்ட தமன்னா..!


ஏங்க.. மா.கா.பா.ஆனந்துக்கும் தமன்னாவுக்கும் என்னக சம்பந்தம்.. நீங்க சொல்றதுல கொஞ்சமாச்சும் லாஜிக் இருக்கா என கேட்கிறீர்கள் தானே..? விஷயம் இல்லாம சொல்லுவோமா..? ரெண்டு நாளைக்கு முன்னாடி கார்த்தி நடிச்சிருக்கிற ‘தோழா’ படத்தோட ஆடியோ ரிலீஸ் நடந்துச்சு.. அந்த விழாவுல நாகார்ஜுனா, தமன்னா எல்லாம் கலந்துக்கிட்டாங்க இல்லையா..?

இந்த விழாவுல கார்த்தி மேடையில ஏறி பேசுறதுக்காக வந்தப்ப, அவருக்கு ஒரு மாலையையும் போட்டு பூங்கொத்தையும் கொடுத்தாங்க.. வழக்கமா இந்தமாதிரி விழாக்கள்ல இந்தமாதிரி சம்பிரதாயமா பூங்கொத்து கொடுத்துட்டு, விழா சம்பந்தப்பட்ட பி.ஆர்.ஒவோ அல்லது விழா அப்ரண்டீஸ்களோ அந்த பூங்கொத்து, சால்வைகளை உடனே வாங்கிட்டு, வி.ஐ.பிகளை ப்ரீ பண்ணி விட்ருவாங்க..

ஆனா இந்த பங்ஷன்ல கார்த்தி அந்த மாலையையும் பூங்கொத்தையும் ஒரு கைல வச்சுக்கிட்டு இன்னொரு கைல மைக்கை பிடிச்சுட்டு பேசுறதுக்கு ரொம்பவே சிரமப்பட்டார்.. இத கீழே இருந்து பார்த்த தமன்னா உடனே மா.கா.பா. ஆனந்தை பார்த்து சைகையால் கார்த்தியிடம் அந்த மாலை, பூங்கொத்தை வாங்கி அவரை ப்ரீ பண்ணுமாறு கூறினார்.

அதன்பின் மா.கா.பா ஓடோடிச்சென்று மாலை பூங்கொத்தை வாங்கினார்.. அதற்கு சற்று முன் தான் தமன்னா பேசும்போது அவரது இரண்டு கைகளிலும் பூங்கொத்து இருந்ததால் மா.கா.பாவே அவரது வாய்க்கு நேராக மைக்கை பிடிக்க கொஞ்ச நேரம் சிரமப்பட்டுத்தான் பேசினார்.. அதனால் தான் அடுத்து பேசவந்த கார்த்திக்கு அந்த கஷ்டம் வேண்டாம் என மா.கா.பாவுக்கு உத்தரவிட்டார் என்பது தெரிந்தது.