திரிசங்கு நிலையில் திமிரு புடிச்சவன்


விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள ‘திமிரு புடிச்சவன்’ படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்திருந்தார்கள். விஜய் ஆண்டனி கூட, “என்னோட கடந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. வியாபார ரீதியாக பிரச்சனைகள்லதான் இருந்தேன். பல தடைகளைத் தாண்டிதான் இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணப் போறேன். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போகுதுன்னு என்னாலயே நம்பமுடியல” என சமீபத்தில் ஆச்சர்யத்துடன் கூறினார்..

அதன்பிறகு அதற்கு ஒரு விளக்கமும் அவர் சொன்னார்.. அதாவது “இந்தப்படம் ஏன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுதுங்குறதுக்கு பெரிய காரணம் எதுவும் இல்ல. வேலைய முடிச்சிட்டோம் ரிலீஸ் பண்றோம். பத்துமாசத்துக்கு மேல ஒரு குழந்தை வயித்துக்குள்ள இருந்தா நல்லாயிருக்காது. நிறைய பிரச்சனைகள் வந்திடுது. படம் முடிச்சிட்டோம், அடுத்த படம் `கொலைகாரன்’ இருக்கு, ரிலீஸ் பண்ணிடலாமே டக்குனு, அப்பிடின்னு ஒரு காரணத்துக்காகத்தான் ரிலீஸ் பண்றோம். இதுக்குப் பின்னாடி வேற எந்த உள்நோக்கமும் கிடையாது” என்றார்

ஆனால் அவருக்கு உள்நோக்கம் இல்லாவிட்டாலும் கூட சர்க்கார் வெளியாகும் சமயத்தில் அவருக்கு எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்கவேண்டுமே. ஆனால் இந்த தீபாவளிக்கு படத்தை அவர் ரிலீஸ் செய்யவேண்டும்.. இல்லாவிட்டால் இந்த வருடத்திற்குள் அவருக்கு வேறு தேதி எதுவும் கிடைக்காத சூழல் ஏற்படும். அப்படியே கிடைத்தாலும், இதே போல இன்னும் சில பெரிய படங்களுடன் சேர்ந்து மோதவேண்டி வரும்,. ஆக திரிசங்கு நிலையில் இருக்கிறான் திமிரு புடிச்சவன்.