த்ரிஷாவை டென்சனாக்கிய ஜெயம் ரவியின் பேச்சு..!

ஜெயம் ரவி, த்ரிஷா மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் அப்பாடக்கர்.. ஸாரி.. இப்பதான் சகலகலா வல்லவன்னு பெயர் மாத்திட்டாங்களே.. அந்தப்படத்தோட பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.. இன்னொரு ஹீரோயின் அஞ்சலியும் வந்திருந்தாங்க.. காமெடியன் சூரி மட்டும் அஜித் கூட கல்கத்தா ஷூட்டிங்க்ல இருந்ததால வர முடியல..

படத்தோட ட்ரெய்லர்ல ‘ஒரு ஆம்பள தனியா சந்தோஷமா இருந்திரலாம்.. ஒரு பொம்பள தனியா சந்தோஷமா இருந்திரலாம்.. ஆனா ஒரு ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்து ரொம்பநாளைக்கு சந்தோஷமா இருக்க முடியாதுன்னு ஜெயம் ரவி பேசுற வசனம் ஒண்ணு இருக்கு.. அத குறிப்பிட்டு ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டாரு.

அதுக்கு ஜெயம் ரவி சொல்லுறப்ப, “இன்னிக்கு கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்லேயே டைவர்ஸ்க்காக வந்து நிக்கிறாங்க.. அவ்வளவு ஏன் ரெண்டு பெரும் சேர்ந்து கல்யாணம் பண்ணிக்குறதே தேவைய்ல்லையோ அப்படிங்கிற மாதிரி நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க.. அதுக்கு இந்தப்படத்துல சொல்யூசன் சொல்லிருக்கோம்” என்றார்..

இந்த கேள்விக்கு முன்புவரை சந்தோஷமாக இருந்த த்ரிஷா, ஜெயம் ரவி கல்யாணம் பற்றி பதில் கொடுக்க ஆரம்பித்தமே அவரது முகம் சுருங்கிப்போனது.. இந்தப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவை யாரும் பெர்ஷனல் கேள்விகள் கேட்டு துன்புறுத்தவில்லை என்றாலும் கூட ஜெயம் ரவி எதார்த்தமாக் பேசிய பேச்சு த்ரிஷாவை காயப்படுத்தியது நன்கு தெரிந்தது.