பிரபல நடிகைக்கு சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை!


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.

இவருக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை அமைக்க உள்ளனர். ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தில் உலக அளவிலான அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், உள்ளிட்டோருக்கு மெழுகுச்சிலை அமைத்துள்ளனர்.

நடிகர்களை பொறுத்தவரை ஹாலிவுட் நடிகர்கள் முதல் பாலிவுட் நடிகர்கள் வரை பல்வேறு பிரபலங்களுக்கு மெழுகுச் சிலை அமைத்துள்ளனர். தற்போது நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்க உள்ளனர். வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச்சிலையை அவரே திறக்க உள்ளார். இது குறித்து காஜல் கூறியதாவது

“மேடம் டுசாட்ஸ் சிங்கப்பூரில் எனது மெழுகு சிலை அமைப்பதில் பெருமை அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.